Jun 22, 2012

முஸ்லிம்கள் மத்தியில் முபாஹலா உண்டா?

(ஆன்லைன்  பீ.ஜே யில் வெளியானது.)
முஸ்லிம்கள் மத்தியில் முபஹலா செய்யலாமா?
சொந்தச் சகோதரர்களுக்கு எதிராகவும் எந்தப் பாவமும் அறியாத பச்சிளம் குழந்தைகள் உட்பட அவர்களின் குடும்பத்திற்கு எதிராகவும் இறைவனின் சாபம் ஏற்படட்டும் என பெரியவர் பிஜே சாபமிட்ட அந்த முபாஹலா நிகழ்ச்சிக்கான ஆதாரம் என்ன?. அவ்வாறு முஸ்லிம் சகோதரர்களுக்கு எதிராக ஒரு சாபமிடும் நிகழ்ச்சி நடத்தலாமா?
 கடலூர் முன்னாள் நிர்வாகிகளுடன் பீஜே முபாஹலா செய்த போது சில மார்க்க மேதாவிகள் முஸ்லிமுக்கு மத்தியில் முபாஹலாச் செய்யலாமா? என்று கேட்க ஆரம்பித்துள்ளனர்.
இது குறித்து விளக்கம் அளிப்பதற்கு முன்னாள் இப்படிக் கேட்பவர்களைப் பற்றியும் நாம் அடையாளம் காட்ட வேண்டியுள்ளது.
தமிழக தவ்ஹீத் வரலாற்றில் கடலூர் முபாஹலா தான் முதல் முபாஹலா அல்ல. இதற்கு முன் பல முபாஹலாக்களுக்கு அறைகூவல் விடப்பட்டுள்ளது.
தமுமுகவில் இருந்து பிரிந்த போது அதன் தலைவர் ஜவாஹிருல்லா பீஜே என்னுடன் முபாஹலா செய்ய தயாரா என்று அறை கூவல் விட்டார். உண்மை பேசுவோம் என்று தமுமுக வெளியிட்ட சீடியில் இதைக் காணலாம். பீஜே இந்த அறை கூவலை ஏற்றுக் கொண்டார். ஆனால் இதன் பின்னர் ஜவாஹிருல்லாவை பல தடவை முபாஹலாவுக்கு அழைத்த போது கடைசி வரை அழைத்தும் அவர் பின் வாங்கி விட்டார்.
பொது வாழ்வில் உள்ள அனைவருக்கும் இது தெரியும். ஆனால் முபஹலாவுக்கு சவால் விடலாமா என்று யாருமே கேட்கவில்லை. கேட்டால் அறை கூவல் விட்ட ஜவாஹிருல்லாவுக்கு சங்கடம் ஏற்படும் என்பதே காரணம்.
 அது போல் மேலப்பளையம் ஃபழ்லுல் இலாஹி என்பவர் முபாஹலா சவால் விட்ட போது பீஜே அதை ஏற்றுக் கொண்டு மேலப்பாளையம் சென்று குறிப்பிட்ட திருமண அரங்கில் முபாஹலா ஒப்பந்தம் செய்வதற்காகக் காத்திருந்தார். உணர்வு இதழிலும் இது விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால் கடைசி வரை ஃபழ்லுல் இலாஹி வரவில்லை. மக்களுக்கு விளக்கம் அளித்து விட்டு பீஜே திரும்பினார்
இதுவும் பொது வாழ்வில் உள்ள அனைவருக்கும் தெரியும். ஆனாலும் இப்போது கேள்வி கேட்கும் அறிவாளிகள் யாரும் இது கூடுமா என்று கேட்கவில்லை. கேட்டால் அப்போது தீவிரமாக அவதூறு பரப்பிக் கொண்டிருந்த ஃபழ்லுல் இலாஹிக்கு சங்கடம் ஏற்படும் என்பதற்காக யாரும் கேள்வி கேட்கவில்லை.
 அது போல் முஜீபுர் ரஹ்மான் உமரி விவாதம் செய்ய பின் வாங்கிய போது விவாதத்துக்கு வராவிட்டால் யார் பொய்யர் என்பதை முபாஹலா மூலம் அல்லஹ்விடம் ஒப்படைப்போம் என்று பீஜே எழுதிய போது அதை முஜீப் ஏற்றுக் கொண்டார். அதற்கான நாளையும் நேரத்தையும் பீஜே முடிவு செய்து தெரிவித்த பின் முஜீப் பின் வாங்கினார். இது மின்னஞ்சல் மூலம் அப்போது பலருக்கும் பரப்பப்பட்டது. பொது வாழ்வில் உள்ள அனைவருக்கும் தெரிந்தது. அப்போது யாரும் கேட்கவில்லை. கேட்டால் முஜீப் பத்ல் சொல்ல வேண்டிய சங்கடம் ஏற்படுமே?
 அது போல் ஹாமித் பக்ரி உடன் முபாஹலா அறை கூவல் நடந்த போது அப்போது அனைவரும் மவுனமாக இருந்தனர்.
 முதன் முதலில் காயல்பட்டணம் ஜலீல் மைதீனுடன் முபாஹலா நடந்தது. இது மார்க்க சேவையில் உள்ள அனைத்து பிரிவினருக்கும் தெரியும்.
முழுவிபரம் அறிய பார்க்க
இப்போது முபாஹலா செய்யக் கூடாது என்ற நிலைபாட்டை எடுத்தவர்கள் அதன் பின்னர் என்னோடு தான் பல ஆண்டுகள் இருந்தனர். அவர்களுக்கு நமக்கும் பிரச்சனை ஏற்பட்டு பிரியும் வரை ஒருவரும் இது பற்றி பேசியதில்லை.
 கடலூர் முபாஹலாவுக்கு பீஜெ அழைப்பு விடவில்லை. கடலூர் முன்னாள் நிர்வகிகள் தான் சவால் விட்டனர். பள்ளிவாசல் தோறும் முபாஹலாவுக்குத் தயாரா என்று துண்டுப் பிரசுரம் வெளியிட்டனர். எனவே பீஜேயிடம் உண்மை இருந்ததால் அதை பீஜே ஏற்றுக் கொண்டார். கடலூர் மாவட்ட முன்னாள் நிர்வாகிகள் தமிழகம் அறிந்தவர்களாக இல்லாததால் அவர்களுக்குச் சங்கடம் ஏற்படுவது பற்றிய பிரச்ச்சனை எழவில்லை.

முழு விபரம் அறிய
பார்க்க
 ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமைச் சபிக்கலாமா என்று இவர்கள் கேள்வி கேட்பதாக இருந்தால் ஜவாஹிருல்லா, முஜீப் ரஹ்மான், ஃபழ்லுல் இலாஹி, ஹாமித் பக்ரி உள்ளிட்ட பலரிடமும் கேட்க வேண்டும். ஆனால் இவர்கள் கேட்கவும் மாட்டார்கள். கேட்டால் அவர்கள் பதில் சொல்லவும் மாட்டார்கள்
இனி இவர்கள் கேட்கும் அல்லாஹ்வுக்கு எதிரான கேள்விக்கு வருவோம். திருக்குர்ஆனில் யூதர்களை முபாஹலாவுக்கு அழைக்கச் சொல்லி அல்லாஹ் பினவருமாறு கட்டளை இடுகிறான்
உமக்கு விளக்கம் வந்த பின் இது குறித்து உம்மிடம் யாரேனும் விதண்டா வாதம் செய்தால் "வாருங்கள்! எங்கள் பிள்ளைகளையும், உங்கள் பிள்ளைகளையும், எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும் அழைப்போம். நாங்களும் வருகிறோம். நீங்களும் வாருங்கள்! பின்னர் இறைவனிடம் இறைஞ்சி பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபத்தைக் கேட்போம்'' எனக் கூறுவீராக!
திருக்குர்ஆன் 3:61
பச்சிளங்குழந்தைகளையும் அழைத்துத் தான் சாபத்தை வேண்ட வேண்டும் என்று அலாஹ் சொல்லித் தருகிறான். இவர்கள் அல்லஹ்வுக்கே பாடம் சொல்லிக் கொடுக்க புறப்பட்டு விட்டார்கள். அல்லாஹ்விடமே எதிர்க் கேள்வி கேட்கிறார்கள்.
இவ்வசனம் யூதர்களைக் குறித்து அருளப்பட்டாலும் யார் பொய்யர் என்ற பிரச்சனை ஏற்படும் போது அனைவருக்கும் உரியது தான்.
குர்ஆன் வசனங்களில் பெரும்பாலானவை ஏதாவது ஒரு பிரிவினர் பற்றி தனி நபர் பற்றித் தான் அருளப்பட்டிருக்கும் ஆனால் அது அவர்களூக்கு மட்டும் உரியது என்று புரிந்து கொள்ளக் கூடாது. அந்தத் தனமையில் உள்ள அனைவருக்கும் உரியது தான்.
லூத் நபி சமுதாயத்தில் ஓரினச் சேர்க்கையை அல்லாஹ் கண்டித்ததால் அது லூத நபி சமுதாயத்துக்கு உரியது நம்க்கு அல்ல என்று புரிந்து கொள்ளக் கூடாது.
ஒருவர் உண்மை சொல்கிறாரா பொய் சொல்கிறாரா என்பது ஒரு பிரச்சனை. இந்தப் பிரச்சனையில் எந்த முடிவும் எட்டப்படா விட்டால் அதற்கு ஒரு தீர்வு கணடாக வேண்டும். அந்தத் தீர்வு தான் அல்லாஹ்வின் பொறுப்பில் விட்டு விடுவதாகும்.
இவ்வசனத்தின் இறுதியில் பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபத்தை இறைஞ்வோம் எனக் கூறப்படுகிறது. யூதப் பொய்யர் முஸ்லிம் பொய்யர் என்றெல்லாம் மூளையுள்ள யாரும் வேறு படுத்த மாட்டார்கள்.
முஸ்லிமுக்கு மத்தியில் உள்ள பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படாது என்று இவர்கள் எங்கிருந்து கண்டு பிடித்தார்கள்? இப்படிக் கூறுபவர்கள் தான் அதற்கான் ஆதாரத்தைக் காட்ட வேண்டும்.
கணவன் தன் மனைவியின் மீது சந்தேகப்பட்டு அதற்கான ஆதாரம் சாட்சிகள் அவனிடம் இல்லா விட்டால் என்ன செய்ய வேண்டும்?
இதை அல்லாஹ் பின் வருமாறு சொல்லிக் காட்டுகிறான்.
தங்களைத் தவிர வேறு சாட்சிகள் இல்லாத நிலையில் தமது மனைவியர் மீது பழி சுமத்துவோர், தாங்கள் உண்மையாளர்கள் என்று அல்லாஹ்வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) சாட்சியமளிக்க வேண்டும். . தான் பொய்யனாக இருந்தால் தன் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும் என்பது ஐந்தாவதாகும். . "அவனே பொய்யன்'' என்று அல்லாஹ்வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) அப்பெண் சாட்சியமளிப்பது தண்டனை யிலிருந்து அவளைக் காக்கும்.  "அவன் உண்மையாளனாக இருந்தால் தன் மீது அல்லாஹ்வின் கோபம் ஏற்படட்டும்'' என்பது ஐந்தாவதாகும்.
திருக்குர்ஆன் 24:6-9
கணவன் மனைவி இருவருமே முஸ்லிம்கள் தான். ஆனால் யார் சொல்வது உண்மை என்ற பிரச்சனை வரும் போது அதற்கு நாம் ஏதாவது தீர்வு காண வேண்டும்.
இதற்கு லிஆன் என்று கூறப்படும். நபித்தோழர்களான கனவன் மனைவிக்கிடையே லிஆன் செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்ததை புகாரி 4745, 5310, 5314, 5315, 5316, 6748, 6856 ஆகிய ஹதீஸ்களில் காணலாம்.
யார் பொய்யர் என்பதைக் கண்டு பிடிக்கும் அவசியம் ஏற்பட்டால் பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று கேட்பதற்கான முக்கியமான ஆதாரமாக இது உள்ளது.  
 மனிதர்களின் உள்ளத்தில் உள்ளதை நாம் கண்டு பிடிக்க முடியாத போது அல்லாஹ்வின் பொறுப்பில் விட்டு விட்டு பிரச்சனையை முடிப்பதைத் தவிர மனிதனுக்கு வேறு வழி இல்லை.
முஸ்லிமுக்கு மத்தியில் யார் பொய்யர்கள் என்பதில் தீர்வு காணும அவசியம் ஏற்பட்டால் பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபத்தை வேண்டக் கூடாது என்று யார் கூறுகிறார்களோ அவர்கள் தான் அதற்கான ஆதாரத்தை எடுத்துக் காட்ட வேண்டும்.
முஸ்லிம் பொய்யர்கள், முஸ்லிம் இணை வைப்பாளர்கள், முஸ்லிம் விபச்சாரிகள் ஆகியோருக்கு சிறப்பு சலுகை உண்டு என்றெல்லாம் மார்க்க அறிவு உள்ள யாரும் வெறுபடுத்த மாட்டார்கள்.
மேலும் இப்படி கேட்பவர்கள் மத்ஹப்வாதிகளாக இருந்தால் அல்லது நபித்தோழர்களின் கூற்றை ஆதாரமாகக் கொள்பவர்களாக இருந்தால் அவர்களுக்காக மேலதிகமாக சில விபரங்களை வைக்கிறோம்.
அறிஞர் இப்னு தைமியா அவர்கள் அத்வைதக் கொள்கை உடைய முஸ்லிம் பெயர் தாங்கிகளிடம் முபாஹலா செய்துள்ளனர்
மற்றொரு அறிஞரான ஹாபிள் இப்னு ஹஜர் அவர்கள் இப்னு அரபியின் சீடர்களுடன் முபாஹலா செய்துள்ளார்
இப்னு அப்பாஸ், சுஃப்யான் ஸவ்ரீ, அவ்ஸாயீ, இப்னுல் கையும் உள்ளிட்ட எண்ணற்ற அறிஞர்கள் தவ்றான் கொள்கை உடையவர்களிடம் முபாஹலா செய்துள்ளனர்; செய்யலாம் எனவும் தீர்ப்பளித்துள்ளனர்.
அதாவது பச்சிளம் பாலகர்களுக்கு எதிராகவும் இறைஞ்சியுள்ளனர்.
 கேள்வி கேட்டு பரப்பியவர்கள் இதற்கு எதிரான ஆதாரங்கள் சம்மந்தப்பட்டவர்கள் மறுப்பு அளிப்பதற்காகவும், இந்தச் செய்தி அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதற்காகவும் மூன்று நாட்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது. மூன்று நாட்களுக்குப் பின் இரண்டாவது கேள்விக்கு பதில் அளிக்கப்படும்.

சூனியம் குறித்து ஜாக் இன் மறுப்புக்கு மறுப்பு

திருக்குர் ஆனையும் நபிவழியையும் விட்டு விட்டு சலபி எனும் புதுமதஹபுக்கு வக்காலத்து வாங்கப் புறப்பட்டுள்ள அல்ஜன்னத் மாத இதழ் சூனியம் குறித்து மிகப் பெரும் ஆராய்ச்சிக்கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. சூனியம் குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஒரு கருத்தை முன்வைக்கிறது என்றால் அது குறித்து எடுத்துவைக்கும் ஒவ்வொரு ஆதாரத்துக்கும் ஒவ்வொரு வாதத்தையும் எடுத்துக் காட்டி அதற்கான மறுப்பை எடுத்து வைக்க வேண்டும். அப்படி இல்லாமல் தூரும் இல்லாமல் தலைப்பும் இல்லாமல் ஒரு மறுப்புக் கட்டுரையை எழுதி அதன் மூலம் தனது அறியாமையை தானே தம்பட்டம் அடித்துள்ளது.

சூனியம் பற்றி தவ்ஹீத் ஜமாஅத்தினர் கேட்கும் கேள்விகளுக்கு என்ன பதில் என்று கேள்விகளைச் சமாளிப்பதற்காக எதையாவது எழுதி விட்டு நாங்கள் அ
ப்போதே இதற்கு பதில் சொல்லி விட்டோம் என்று கூறி சலபி மத்ஹபினரை நம்ப வைக்கவே இந்தக் கட்டுரையை அல்ஜன்னத் வெளியிட்டுள்ளது.

அல்ஜன்னத் வெளியிட்ட அந்த ஆராய்ச்சிக் கட்டுரை இது தான்














   


















   
இது தான் அந்தக் கட்டுரை. இதில் உள்ள அபத்தங்களை அப்பாஸ் அலி அவர்கள் ஆய்வு செய்து கட்டுரை தயாரித்து அனுப்பியுள்ளார். அதை தேவையான மாற்றம் செய்து வெளியிடுகிறோம்.

சூனியம் குறித்து நாம் எழுதிய ஆக்கங்கள் பல ஆண்டுகளுக்கு முன்னரே நமது இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஆக்கங்களில் உள்ள பல ஆதாரங்களுக்கு எந்த பதிலும் இதில் சொல்லப்படவில்லை. மேலும் இதில் சொல்லப்பட்டுள்ள பல வாதங்களுக்கு நாம் முன்னரே பதில் சொல்லி இருந்தும் அதைக் கூட வாசிக்காமல் ஏதோ எழுத வேண்டும் என்பதற்காக எழுதியுள்ளனர். இது குறித்து நாம் எழுதியுள்ள ஆக்கங்களை வாசித்து விட்டு அல்ஜன்னத் கட்டுரையையும் வாசித்தால் அல்ஜன்னத் கட்டுரையில் சரக்கு ஏதும் இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/357/
http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/28-vanavarkal-sooniyathai-katru-tharavillai/
http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/182-sooniyam-karpanaiye/
http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/285/
http://onlinepj.com/aayvukal/sihru_1/
http://onlinepj.com/bayan-video/vivathangal/soonoyam_vathamum_ethirvathamum/
http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/illatha_sooniyam_eppadi_perumbavamakum/ 

இவ்வளவு ஆக்கங்களிலும் நாம் எடுத்து வைத்த வாதங்களை ஒவ்வொன்றாக எழுதி பட்டியல் போட்டுக் கொண்டு அல்ஜன்னத்தின் அறியாமைக் கட்டுரையை வாசித்தால் ஏராள்மான வாதங்களுக்கும் ஆதாரங்களுக்கும் வாதங்களுக்கும் இவர்களிடம் எந்த பதிலும் இல்லை என்பதையும் இத்தனை ஆண்டுகள் தேடிப்பிடித்து இவர்கள் எழுதிய மறுப்பின் இலட்சணத்தையும் அறிந்து கொள்ளலாம். இவர்கள் இப்போது எழுதியுள்ள பல விஷயங்கள் முன்னர் ஒருவரால் எழுதப்பட்டு அதற்கு நாம் பதிலும் அளித்த பின்னர் அதையே காப்பி அடித்து எழுதியுள்ளனர் என்பதும் உங்களுக்கு தெரிய வரும்.

மேற்கண்ட ஆக்கங்களில் தேவைக்கு அதிகமாகவே விளக்கம் இருந்தாலும் இபோதும் ஒரு முறை இந்த அபத்தக் கட்டுரைக்கு பதிலை மீண்டும் வெளியிடுகிறோம்.

உலகத்தில் மூட நம்பிக்கைகளுக்கு எதிரான மார்க்கம் இஸ்லாத்தைத் தவிர வேறு எந்த மதமும் இல்லை.  மனிதனுக்கு கேடு விளைவிக்கின்ற ஓரிறைக் கொள்கைக்கு ஊறுவிளைவிக்கக் கூடிய எல்லா நம்பிக்கைகளையும் இஸ்லாம் தகர்த்து எரியக்கூடிய மார்க்கம். ஆனால் இன்றைக்கு இஸ்லாமிய சமுதாயத்தில் உள்ள சிலர் இஸ்லாத்தை சரியான அடிப்படையில் அறியாத காரணத்தால் தற்போது மக்களிடம் காணப்படும் மூடநம்பிக்கைகளை நியாயப்படுத்திக்கொண்டிருக்கின்றார்கள். 

தங்களுடைய வழிகேட்டிற்கு குர்ஆன் வசனங்களையே ஆதாரமாகக் காட்டி இந்த மூடநம்பிக்கைகளை ஏற்றுக் கொள்வது தான் குர்ஆனுடைய வழி என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வழி என்றும் கூறுகின்றனர்.
தெளிவான ஆதாரங்கள் இல்லாமல் தங்களுடைய யூகங்களையும் கற்பனைகளையும் குர்ஆனில் புகுத்தி தவறான விளக்கம் கொடுக்கும் இவர்கள் மிக ஆபத்தானவர்கள். அல்லாஹ்வின் மார்க்கத்தைக் குழப்ப நினைக்கும் குழப்பவாதிகள்.
ஜாக் ஜமாத் வெளியிடும் அல்ஜன்னத் என்ற மாத இதழ் இப்படிப்பட்ட குழப்பத்தைச் செய்துகொண்டிருக்கின்றது. சென்ற மே மாதம் அவர்கள் வெளியிட்ட அல்ஜன்னத் இதழில் சூனியம் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தனர்.
அதில் நம்முடைய கருத்துக்களை விமர்சித்து சூனியத்துக்கு அவர்களாக கற்பனை செய்துகொண்ட விளக்கத்தைக் கூறி இருந்தனர். வழக்கம் போல் இந்த கற்பனைக் கதைகளுக்கு இடையே குர்ஆன் வசனங்களையும் குறிப்பிட்டு  தங்களுடைய சுயக் கற்பனை கருத்துக்களுக்கு தோதுவாக அந்த வசனங்களை வளைத்துக் கொண்டனர்.
எனவே இந்த ஆய்வுக் கட்டுரையில் அவர்களின் அறியாமையை ஒவ்வொன்றாக தெளிவுபடுத்துவோம்.

வித்தைகளைப் போட்டார்களா? கயிறுகளைப் போட்டார்களா?

"நீங்களே போடுங்கள்!'' என்று (மூஸா) கூறினார். அவர்கள் (தமது வித்தைகளைப்) போட்ட போது மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள். மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள். பெரும் சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தனர்.
அல்குர்ஆன் (7 : 116)

7 : 116 வது வசனத்துக்கு சகோதரர் பீஜே அவர்கள் மேற்கண்டவாறு மொழிபெயர்த்துள்ளார்கள்.  அடைப்புக் குறிக்குள் தமது வித்தைகளை என்று பீஜே அவர்கள் குறிப்பிட்டதை இவர்கள் சுட்டிக்காட்டி இது குர்ஆனைத் திரித்துக் கூறும் செயல். தனது தவறான கருத்துக்குத் தோதுவாக குர்ஆனை வளைப்பதாகும் என்று குற்றம் சாட்டுகின்றனர்.
திருக்குர்ஆனில் 26 : 43  மற்றும் 20 : 66 ஆகிய இடங்களிலும் சூனியக்காரர்கள் கயிறுகளையும் கைத்தடிகளையும் போட்டனர் என்று சொல்லப்பட்டு இருப்பதால் அடைப்புக் குறிக்குள் இதைச் சொல்லாமல் வித்தைகளைப் போட்டனர் என்று கூறியிருப்பது மிகப்பெரிய தவறு என்று விமர்சனம் செய்துள்ளனர்.
குர்ஆன் கூறாத கருத்தை அடைப்புக் குறிக்குள் குறிப்பிடுவது தவறு என்பதில் நமக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால் குர்ஆன் கூறிய கருத்தை குர்ஆன் கூறவில்லை என்று இவர்கள் சொல்வதையே நாம் மறுக்கின்றோம்.
நம்மைப் பொறுத்தவரை அடைப்புக்குறிக்குள் கயிறுகளையும் கைத்தடிகளையும் போட்டனர் என்று கூறுவதும் சரி. வித்தைகளைப் போட்டனர் என்று கூறுவதும் சரி.
மூசா நபியின் வரலாற்றை முழுவதுமாக படிக்கும் போது மூசா (அலை) அவர்களுடன் போட்டி போட வந்த சூனியக்காரர்கள் கண்கட்டி வித்தை செய்தார்கள் என்று குர்ஆன் கூறுவதை தெளிவாக அறியலாம்.

7:116 வசனத்தை மட்டும் பார்த்து விட்டு இவர்கள் மேற்கண்ட விமர்சனத்தைச் செய்துள்ளனர். ஆனால் 7:115, 7:116, 7:117 ஆகிய மூன்று வசனங்களையும் வரிசையாகப் பார்ப்போம்.
"மூஸாவே! (வித்தைகளை) நீர் போடுகிறீரா? நாங்களே போடட்டுமா?'' என்று அவர்கள் கேட்டனர்.

"நீங்களே போடுங்கள்!
'' என்று (மூஸா) கூறினார். அவர்கள் (தமது வித்தைகளைப்) போட்ட போது மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள். மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள். பெரும் சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தனர்.
"உமது கைத்தடியைப் போடுவீராக!'' என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது அவர்கள் செய்த வித்தையை விழுங்கியது. உண்மை நிலைத்தது. அவர்கள் செய்து கொண்டிருந்தவை வீணாயின.
அல்குர்ஆன் (7 : 115,116, 117)
வித்தை என்ற சொல்லை 116 வது வசனத்தில் பீஜே பிராக்கெட்டில் போட்டுள்ளார். 117 வசனத்தில் பிராக்கெட்டில் இல்லாமல் போட்டுள்ளார். வித்தையை விழுங்கியது என நாம் மொழிபெயர்த்துள்ள 117 ஆம் வசனத்தில் குர்ஆனில் யஃபிகூன் என்ற அரபுச் சொல் இடம்பெற்றுள்ளது. இதற்கு அவர்கள் பொய்யாக உருவாக்கியவை என்று அர்த்தம். இந்தச் சொல்லுக்கு இந்த அர்த்தம் இருப்பதை அரபு தெரிந்த யாரும் மறுக்க மாட்டார்கள். அவர்களின் வித்தையை விழுங்கியது என்று இவ்வசனம் சொல்வதால் அவர்கள் எதைப் போட்டார்கள் என்பதை விளக்கும் போது வித்தையை என்று பீஜே பிராக்கெட்டில் போட்டுள்ளார். அதாவது இந்தத் தொடர் வசனங்களில் கூறப்பட்டதை வைத்து தெளிவாகும் கருத்தை பிராக்கெட்டில் போதுவது எப்படி குர் ஆனில் இல்லாத கருத்தைத் தினிப்பதாக ஆகும்? 
அவர்கள் பொய்யாக உருவாக்கியவை என்பதும் அவர்கள் செய்த வித்தை என்பதும் ஒரே கருத்தை தரக்கூடிய சொற்களாகும்.  இவ்விரண்டில் எதைக் கூறினாலும் அது குர்ஆனில் சொல்லப்பட்ட வாசகமே அன்றி வேறில்லை. இன்னும் சொல்லப்போனால் கயிறுகளையும் கைத்தடிகளையும் சாதாரணமாக அவர்கள் போட்டிருந்தால் அது மக்களைக் கவர்ந்திருக்காது. வித்தை கலந்து அதை போட்டதால் தான் இந்த நிலை ஏற்பட்டது. இதை வைத்து பார்க்கும் போது நாம் அடைப்புக்குறிக்கும் சரியாகவே போட்டுள்ளோம் என்பது உறுதியாகிறது.
சூனியக்காரர்கள் கயிறுகளையும் கைத்தடிகளையும் பாம்பாக மாற்றினால் அதை அற்புதம் என்று சொல்லலாம். அவர்கள் பாம்பாக மாற்றவில்லை என்பதை அல்ஜன்னத் இதழும் ஒத்துக் கொள்கின்றது.
கயிறுகளையும் கைத்தடிகளையும் தானாக நகர்வது போன்ற தோற்றத்தைத் தான் ஏற்படுத்த முடிந்தது. அது கூட உண்மையில்லை. பொய்யான தோற்றத்தையே ஏற்படுத்தினர்.
கயிறுகளும் கைத்தடிகளும் தானாக அசையாது. இது தான் எதார்த்தமான விஷயம். இந்த எதார்த்தத்திற்கு மாற்றமாக கயிறுகளும் கைத்தடிகளும் அசைந்தால் அது மக்களுக்கு ஒரு ஆச்சரியத்தையும் பயத்தையும் ஏற்படுத்தவே செய்யும். இதைத் தான் சூனியக்காரர்கள் செய்தார்கள். இதற்கு வித்தை என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது?
மேலம் 20 : 69 வது வசனத்தில் சூனியக்காரர்கள் சூழ்ச்சியையும் தந்திரத்தையும் தான் செய்தார்கள் என்று தெளிவாகவே சூனியம் என்பது வித்தை என்று அல்லாஹ் கூறுகிறான்.
"உமது வலது கையில் உள்ளதைப் போடுவீராக! அவர்கள் செய்தவற்றை அது விழுங்கி விடும். அவர்கள் செய்திருப்பது சூனியக்காரனின் சூழ்ச்சி. (போட்டிக்கு) வரும் போது சூனியக்காரன் வெற்றி பெற மாட்டான்'' (என்றும் கூறினோம்.)
அல்குர்ஆன் (20 : 69)
7 : 116 வது வசனத்தில் சூனியக்காரர்கள் மக்களின் கண்களை ஏமாற்றினார்கள் என்று கூறப்படுகின்றது.
"நீங்களே போடுங்கள்!'' என்று (மூஸா) கூறினார். அவர்கள் (தமது வித்தைகளைப்) போட்ட போது மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள். 
அல்குர்ஆன் (7 : 116)
இன்றைக்கு இதை எல்லாம் மிஞ்சும் வகையில் வித்தைக் கலை வளர்ந்துவிட்டது. எந்தச் சாதனமும் இல்லாமல் வானத்தில் பறப்பதைப் போன்றும், ஒரு பெரிய பொருள் திடீரென மறைவது போன்றும், இல்லாத பொருளைத் திடீரென கொண்டு வருவது போன்றும் இன்னும் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தக்கூடிய பல விஷயங்களை வித்தை செய்பவர்கள் செய்கிறார்கள்.
இவர்களுக்கு மறைமுகமான ஆற்றல் ஏதோ உள்ளது என்று ஜாக் அமைப்பினர் கூறுவார்களா? இவர்கள் இந்த வித்தைக்காரர்களையும் மந்திரவாதிகளாக ஆக்கினாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
குர்ஆனில் இடம்பெற்றுள்ள குறிப்பிட்ட சம்பவத்தில் முன்பின் வார்த்தைகளைக் கவனிக்காமல் சூனியம் பற்றி ஆய்வை வெளியிட்டால் அந்த ஆய்வு இந்த லட்சணத்தில் தான் இருக்கும்.
எனவே வித்தைகளைப் போட்டார்கள் என நாம் அடைப்புக் குறிக்குள் போட்ட வாசகம் குர்ஆனில் கூறப்பட்ட கருத்தே ஆகும்.

புறச்சாதனமின்றி பாதிப்பை ஏற்படுத்த இயலாது

ஒருவர் எந்த புறச் சாதனத்தையும் பயன்படுத்தாமல் பிறருக்கு தீங்கு விளைவிக்க முடியாது என்று நாம் கூறுகிறோம். இந்தக் கருத்துக்கு எதிராக திருக்குர்ஆனின் 2 : 102 வது வசனம் அமைந்துள்ளது என அல்ஜன்னத் இதழ் வாதிடுகின்றது.
ஸுலைமானின் ஆட்சியில் ஷைத்தான்கள் கூறியதை இவர்கள் பின்பற்றினார்கள். (ஜிப்ரீல், மீகாயீல் எனும்) அவ்விரு வானவர்களுக்கும் (சூனியம்) அருளப்படவில்லை. ஸுலைமான் (ஏக இறைவனை) மறுக்கவில்லை. பாபில் நகரத்தில் சூனியத்தை மக்களுக்குக் கற்பித்த ஹாரூத், மாரூத் என்ற ஷைத்தான்களே மறுத்தனர். "நாங்கள் படிப்பினையாக இருக்கிறோம். எனவே (இதைக் கற்று இறைவைனை) மறுத்து விடாதே!'' என்று கூறாமல் அவ்விருவரும் யாருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை. கணவனுக்கும், மனைவிக்குமிடையில் பிரிவினை ஏற்படுத்துவதையே அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்றுக் கொண்டனர். அல்லாஹ்வின் விருப்பமின்றி யாருக்கும் எந்தத் தீங்கும் அவர்களால் செய்ய முடியாது. தமக்குத் தீங்களிப்பதையும், பயனளிக்காததை யும் கற்றுக் கொண்டார்கள். "இதை விலைக்கு வாங்கியோருக்கு மறுமையில்1 எந்த நற்பேறும் இல்லை' என்பதை உறுதியாக அவர்கள் அறிந்து வைத்துள்ளனர். தங்களை எதற்காக விற்றார்களோ அது மிகவும் கெட்டது. அவர்கள் அறிய வேண்டாமா?
அல்குர்ஆன் (2 : 102)
சூனியம் என்பது காஃபிராக்கிவிடும் அளவுக்குப் பெரும்பாவம். இதைச் செய்பவருக்கு மறுமையில் எந்த நற்பேறும் இல்லாமல் போகும். இதன் மூலம் கணவன் மனைவிக்கு இடையே பிரிவை உண்டுபண்ண முடியும் என்று இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே இதை அப்படியே நம்ப வேண்டும் என அல்ஜன்னத் கூறுகிறது.

குருட்டு நம்பிக்கையை குர்ஆனில் புகுத்தும் ஜாக்

இதை அப்படியே நம்ப வேண்டும் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. புறச்சாதனம் எதுவும் இல்லாமல் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்பதற்கு இந்த வசனத்தில் ஆதாரம் இருப்பதாக அல்ஜன்னத் கூறுகிறது. இந்தக் கருத்து இந்த வசனத்தில் எங்கே இருக்கின்றது என்பது தான் நம்முடைய கேள்வி.
புறச்சாதனம் இல்லாமல் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்று இந்த வசனம் உட்பட குர்ஆனில் எங்கும் சொல்லப்படவில்லை. இவர்களின் சுய கற்பனையைக் கொண்டு வந்து இந்த வசனத்தில் நுழைக்கிறார்கள். இவர்கள் எப்படி நுழைக்கிறார்கள் என்பதைப் பாருங்கள். இந்த வசனத்தை கூறிவிட்டு இதன் கீழ் பின்வருமாறு ஜாக் எழுதுகிறது.
இது எவ்விதம் என்று நாம் கண்கூடாகப் பார்க்க இயலாத வண்ணமும் இருக்கலாம். புறச்சாதனங்களை பயன்படுத்தாமல் மறைமுக சாதனங்கள் ஏதாவதொன்றை பயன்படுத்தலாம். நம்மால் வெளிப்படையாக அறிந்துகொள்ள இயலாத ஒன்று சூனியத்திலும் இருக்கலாம்.
இது தான் இவர்கள் காட்டும் ஆதாரம். இது ஆதாரமா அல்லது இவர்களாக எழுதிக் கொண்ட்தா? ஆதாரம் என்றால் ஒரு வசனத்தை எடுத்துக் காட்ட வேன்உம் , அல்லது ஒரு நபிமொழியை எடுத்துக் காட்டவேன்உம். அவ்வாறு எதியும் காட்டாமல் இப்படி இருக்கலாம் அப்படி இருக்கலாம் என்பது தான் ஆய்வு செய்யும் லெட்சணமா?

எனவே இவர்கள் சூனியத்தில் புறச்சாதனங்கள் இல்லாமல் தீங்கு செய்ய முடியும் என்பதற்கு இவர்களின் யூகங்களைத் தான் ஆதாரங்களாக்க் கூறியுள்ளார்கள். இதற்கு குர்ஆனையோ ஆதாரப்பூர்வமான நபிமொழியையோ இவர்கள் காட்டவில்லை.
ஆதாரமற்ற இந்த யூகத்தின் அடிப்படையில் சூனியத்தின் மூலம் புறச்சாதனங்கள் இல்லாமல் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்று நம்புவது தெளிவான மூடநம்பிக்கையாகும்.
இவர்களின் இந்த யூகத்தைப் படித்தால் இந்த வசனத்தில் சொல்லப்படும் தீங்கை புறச்சாதனங்களைப் பயன்படுத்தியும் செய்யலாம். அச்சாதனங்கள் இல்லாமலும் செய்யலாம் என்ற கருத்தையே கூறியுள்ளனர். நமது விளக்கத்தை இவர்களால் மறுக்க முடியவில்லை. அப்படியிருக்க இந்த வசனத்தில் நமக்கு எதிரான கருத்து கூறப்பட்டுள்ளது என்று ஏன் சொல்ல வேண்டும்?
2 : 102 வது வசனத்தில் சூனியத்தின் மூலம் கணவன் மனைவிக்கு இடையே பிரிக்க முடியும் என்று தான் சொல்லப்பட்டுள்ளது. புறச்சாதனங்கள் இல்லாமல் இந்த தீங்கைச் செய்ய முடியும் என்று சொல்லப்படவில்லை. அப்படியிருக்க இவர்கள் தங்களுடைய குருட்டு நம்பிக்கைக்கு இந்த வசனத்தை எப்படி ஆதாரமாகக் காட்ட முடியும்?

நபிமொழி அடிப்படையிலான விளக்கம்

2 : 102 வது வசனத்துக்குரிய சரியான விளக்கதை நபிமொழிகளின் துணையுடன் அறிந்து கொள்ள முடியும்.
சூனியக்கலையில் ஈடுபட்ட ஹாரூத் மாரூத் ஆகிய இருவரும் கணவன் மனைவிக்கு இடையே பிரிவினை ஏற்படுத்தும் காரியத்தைக் கற்றுக் கொடுத்ததாக இவ்வசனம் கூறுகின்றது.
சூனியம் என்றால் பொய்யை உண்மை போல் காட்டும் வித்தை என்று மூசா நபியின் வரலாறு விளக்குகின்றது. இந்த விளக்கம் இந்த வசனத்திலும் பொருந்திப் போகின்றது.
பேச்சில் சூனியம் இருக்கின்றது என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
5146حَدَّثَنَا قَبِيصَةُ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ يَقُولُ جَاءَ رَجُلَانِ مِنْ الْمَشْرِقِ فَخَطَبَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ مِنْ الْبَيَانِ لَسِحْرًا رواه البخاري
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
(மதீனாவிற்கு) கிழக்கிலிருந்து  இரண்டு  மனிதர்கள் வந்து சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், " பேச்சில் சூனியம் (கவர்ச்சி) உள்ளது'' என்று சொன்னார்கள்.
புகாரி (5146)
கவர்ச்சியாகப் பேசினால் பொய்யைக் கூட உண்மை என்று நம்பவைத்து விடலாம். இதுவும் சூனியக் கலையின் ஒரு அம்சமாகும். கவர்ச்சியான பேச்சின் மூலம் கணவனிடம் மனைவியைப் பற்றி தவறான அப்பிராயங்களை ஏற்படுத்த முடியும். இதே போன்று கவர்ச்சியாகப் பேசி மனைவியிடம் கணவனைப் பற்றி தவறான அபிப்பிராயங்களை ஏற்படுத்த முடியும். முடிவில் கணவன் மனைவி பிரியும் சூழல் இதனால் ஏற்படும்.
இப்பாவத்தைச் செய்யக்கூடிய பலர் சமுதாயத்தில் இருக்கின்றனர். இவர்கள் எத்தனையோ குடும்பங்களைத் தங்களது நாவால் பிரித்திருக்கின்றனர். ஷைத்தான் இவ்வாறே கணவன் மனைவியைப் பிரிப்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
5032حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ وَاللَّفْظُ لِأَبِي كُرَيْبٍ قَالَا أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ حَدَّثَنَا الْأَعْمَشُ عَنْ أَبِي سُفْيَانَ عَنْ جَابِرٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ إِبْلِيسَ يَضَعُ عَرْشَهُ عَلَى الْمَاءِ ثُمَّ يَبْعَثُ سَرَايَاهُ فَأَدْنَاهُمْ مِنْهُ مَنْزِلَةً أَعْظَمُهُمْ فِتْنَةً يَجِيءُ أَحَدُهُمْ فَيَقُولُ فَعَلْتُ كَذَا وَكَذَا فَيَقُولُ مَا صَنَعْتَ شَيْئًا قَالَ ثُمَّ يَجِيءُ أَحَدُهُمْ فَيَقُولُ مَا تَرَكْتُهُ حَتَّى فَرَّقْتُ بَيْنَهُ وَبَيْنَ امْرَأَتِهِ قَالَ فَيُدْنِيهِ مِنْهُ وَيَقُولُ نِعْمَ أَنْتَ قَالَ الْأَعْمَشُ أُرَاهُ قَالَ فَيَلْتَزِمُهُ رواه مسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
இப்லீஸ், தனது சிம்மாசனத்தை (கடல்) நீரின் மீது அமைக்கிறான். பிறகு தன் பட்டாளங்களை (மக்களிடையே) அனுப்புகிறான். அவர்களில் மிகப் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற (ஷைத்தான் எவனோ அ)வனே இப்லீஸிடம் மிகவும் நெருங்கிய அந்தஸ்தைப் பெறுகிறான். அவனிடம் ஷைத்தான்களில் ஒருவன் (திரும்பி)வந்து "நான் இன்னின்னவாறு செய்தேன்'' என்று கூறுவான். அப்போது இப்லீஸ், "(சொல்லிக் கொள்ளும் அளவுக்கு) நீ எதையும் செய்யவில்லை'' என்று கூறுவான். பிறகு அவர்களில் மற்றொருவன் வந்து, "நான் ஒரு மனிதனுக்கும் அவனுடைய மனைவிக்கும் இடையே பிரிவை ஏற்படுத்தாமல் அவனை நான் விட்டுவைக்கவில்லை'' என்று கூறுவான். அப்போது இப்லீஸ், அவனை அருகில் வரச் செய்து, "நீதான் சரி(யான ஆள்)'' என்று (பாராட்டிக்) கூறுவான்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
முஸ்லிம் (5419)
எனவே சூனியக்கலை ஒன்று இருக்கின்றது. இக்கலையால் பொய்யை உண்மையாக காண்பிக்கும் வித்தையை மட்டுமே செய்ய முடியும். ஒருவரின் உடம்பில் பாதிப்பை ஏற்படுத்தவோ உறுப்புக்களை செயலிழக்கச் செய்யவோ இதன் மூலம் முடியாது. பாமரர்களை ஏமாற்றி கணவன் மனைவிக்கிடையே பிரிவினை ஏற்படுத்த முடியும் என்பது ஹதீஸ் துணையுடன் நமக்குத் தெளிவாக விளங்குகிறது..

சூனியமும் ஜோசியமும்

ஜோசியக்காரனுக்கு ஜின்கள் மறைமுக செய்தியைத் தெரிவிப்பார்கள் என்று ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது. இது போல் கண்ணுக்குத் தெரியாத தீய ஜின்களின் தீங்கு சூனியத்தில் இருக்கலாம் என்று ஜாக் கூறுகிறது.
 சூனியத்தில் புறச்சாதனங்கள் இல்லாமல் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்பதற்கு இது எப்படி ஆதாரமாகும்? சூனியத்தைப் பற்றி விளக்குவதாகச் சொல்லிவிட்டு அது தொடர்பான ஆதாரத்தைக் காட்டாமல் ஜோசியம் தொடர்பான செய்திக்குத் தாவினால் இவர்கள் என்ன தான் நினைக்கின்றார்கள்? ஆய்வு என்ற பெயரில் எதைச் செய்தாலும் மக்கள் நம்பிவிடுவார்கள் என்று மக்களைத் திசைதிருப்பும் வேளையில் ஈடுபடுகின்றனர்.
ஜோசியம் தொடர்பான ஹதீஸையும் இவர்கள் தங்கள் கருத்துக்கு வளைக்கப் பார்க்கின்றனர். ஓரிரு தகவல்களை ஜின்கள் குறிகாரனுக்குச் சொன்னது என்று ஹதீஸ் உள்ளது. இதனால் ஜின்களின் மூலம் மனிதனுக்கு சில நன்மை ஏற்பட முடியும் என்று வேண்டுமானால் கூறலாம். இந்த ஹதீஸை வைத்துக்கொண்டு பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்று கூற முடியாது. அந்தக் கருத்து நேரடியாகவோ மறைமுகமாகவோ இதில் இடம்பெறவில்லை.
ஆனால் இவர்களோ ஜின்கள் மனிதனுக்கு மறைமுகமான முறையில் பாதிப்பை ஏற்படுத்தும் என இந்த ஹதீஸ் கூறுவதாகச் சொல்கிறார்கள். ஹதீஸில் இல்லாத தங்களுடைய சுய கற்பனையை ஹதீஸில் புகுத்தும் இவர்களுக்கு நாம் அடைப்புக்குறிக்குள் ஆதாரத்துடன் இட்ட விளக்கத்தை விமர்சிக்க என்ன தகுதி இருக்கின்றது?
ஜோசியம் தொடர்பான ஹதீஸில் கூறப்படும் நிலமை திருக்குர்ஆன் அருளப்படுவதற்கு முன்பிருந்த நிலையாகும். திருக்குர்ஆன் அருளப்பட்ட பிறகு இது மாற்றப்பட்டுவிட்டது.
இவர்களுக்கு இந்த அறிவும் இல்லாமல் இப்போதும் ஜின்கள் ஜோசியக்காரனுக்கு தகவல்களை கடத்துவதாக உளறி இவர்கள் ஆய்வில் அரைகுறை என்பதை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஜோசியம் தொடர்பான ஹதீஸின் விளக்கம்

ஜோசியக்காரன் பல பொய்களை சொன்னாலும் அவன் சொன்ன ஓரிரு விசயங்கள் நடந்து விடுகின்றதே என நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அந்த ஓரிரு செய்திகள் ஜின்கள் வானுலகத்தில் ஒட்டுக்கேட்டு வந்த இந்த ஜோசியக்காரனுக்கு சொன்ன செய்திகள். இதனுடன் அவன் நூறு பொய்களை சேர்த்துக்கொள்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆதாரப்பூர்வமான செய்திகள் ஹதீஸ் நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜோசியக்காரனுக்கும் ஜின்களுக்கும் இடையில் இப்படி ஒரு தொடர்பு இருந்தது என இந்த ஹதீஸ் கூறுகிறது.

நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்படுவதற்கு முன்பு வரை இந்த நிலை இருந்தது. அவர்கள் இறைத்தூதராக அனுப்பப்பட்டவுடன் வானுலகத்தில் எந்தச் செய்தியையும் கேட்க முடியாத வாறு ஜின்கள் தடுக்கப்பட்டு விட்டார்கள். ஜின்களுக்கும் ஜோசியக்காரனுக்கும் இடையிலான இந்த தொடர்பு முற்றிலும் முறிக்கப்பட்டுவிட்டது.    இதை பின்வரும் ஆதாரங்கள் தெளிவுபடுத்துகின்றது.
இதை ஷைத்தான்கள் இறக்கிடவில்லை. அது அவர்களுக்குத் தகுதியானதும் அல்ல. அதற்கு அவர்களால் இயலாது. அவர்கள் செவியேற்பதை விட்டும் தடுக்கப்பட்டவராவர்.
அல்குர்ஆன் (26 : 210)"
வானத்தைத் தீண்டினோம். அது கடுமையான பாதுகாப்பாலும், தீப்பந்தங்களாலும் நிரப்பப்பட்டுள்ளதைக் கண்டோம். (ஒட்டுக்) கேட்பதற்காக அங்கே பல இடங்களில் அமர்வோராக இருந்தோம். இப்போது யார் (ஒட்டுக்) கேட்கிறாரோ அவர் காத்திருக்கும் தீப்பந்தத்தை தனக்கு (எதிராக) காண்பார்.
அல்குர்ஆன் (72 : 8)
ஜின்கள் ஒட்டுக்கேட்பதை விட்டும் தடுக்கப்பட்டதால் மறைவான விஷயங்கள் எதுவும் அவர்களால் அறிந்துகொள்ள முடியாது. இதை ஜின்களே கூறுகின்றன.
பூமியில் உள்ளவர்களுக்குக் கெடுதி நாடப்பட்டுள்ளதா? அல்லது அவர்களின் இறைவன் அவர்களுக்கு நேர் வழியை நாடியிருக்கிறானா? என்பதை அறிய மாட்டோம்.
அல்குர்ஆன் (72 : 10)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் "உக்காழ்' எனும் சந்தையை நோக்கிச் சென்றார்கள். (இந்த நேரத்தில்) ஷைத்தான்களுக்கும் வானுலகச் செய்திகளுக்குமிடையே திரையிடப்பட்டு (அச்செய்திகளைக் கேட்கவிடாமல் ஷைத்தான்கள் தடுக்கப் பட்டு)விட்டனர். (வானுலகச் செய்திகளை ஒட்டுக் கேட்கச் சென்ற) ஷைத்தான்கள் மீது தீப்பந்தங்கள் ஏவிவிடப்பட்டன. (ஒட்டுக் கேட்கச் சென்ற) அந்த ஷைத்தான்கள் (ஒரு செய்தியும் கிடைக்காமல் தம் தலைவர்கüடம்) திரும்பி வந்தனர். அப்போது தலைவர்கள், "உங்களுக்கு என்ன நேர்ந்தது?'' என்று கேட்டார்கள். ஷைத்தான்கள், "வானகத்துச் செய்திகளுக்கும் எங்களுக்குமிடையே திரையிடப்பட்டு விட்டது; எங்கள் மீது தீப்பந்தங்கள் ஏவி விடப்பட்டன'' என்று பதிலளித்தனர். "புதியதொரு நிகழ்ச்சி ஏதேனும் சம்பவித்திருக்கும். அதுவே உங்களுக்கும் வானத்துச் செய்திகளுக்குமிடையே தடையாக அமைந்திருக்க வேண்டும். எனவே நீங்கள், பூமியின் கீழ்த்திசை, மேல்திசை (என நாலா பாகங்களிலும்) சென்று புதிதாகச் சம்பவித்துவிட்ட இந்த நிகழ்ச்சி என்னவென்று ஆராயுங்கள்'' என்றனர். உடனே ஷைத்தான்கள் பூமியின் கீழ்த்திசை, மேல்திசை எங்கும் பயணம் செய்து தங்களுக்கும் வானுலகச் செய்திகளுக்கும் இடையே தடுப்பாய் அமைந்த அந்த நிகழ்ச்சி என்னவென்று ஆராயலாயினர். "திஹாமா' எனும் (மக்கா) பகுதியை நோக்கி ஷைத்தான்கள் வந்தபோது "உக்காழ்' சந்தையை நோக்கிச் சென்றுகொண்டிருந்த அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் "நக்லா' எனுமிடத்தில் தம் தோழர்களுக்கு "ஃபஜ்ரு'த் தொழுகையை முன்னின்று நடத்திக் கொண்டிருந்தார்கள்.அப்போது ஓதப்பட்ட குர்ஆன் வசனங்களை அந்த ஷைத்தான்கள் கேட்ட போது அதைக் கவனமாகச் செவிகொடுத்துக் கேட்டனர். அப்போது ஷைத்தான்கள் (தங்களுக்கிடையில்) "வானத்துச் செய்திகளை (கேட்கமுடியாமல்) உங்களைத் தடுத்தது இதுதான்'' என்று கூறிவிட்டு, தம் கூட்டத்தாரிடம் சென்று, "எங்கள் கூட்டத்தாரே! திண்ணமாக நாங்கள் ஆச்சரியமானதொரு குர்ஆனைச் செவிமடுத்தோம். அது நேர்வழியைக் காட்டுகின்றது. எனவே நாங்கள் அதை விசுவாசித்தோம். எங்கள் இறைவனுக்கு (இனி) நாங்கள் ஒருபோதும் யாரையும் இணையாகக் கருதமாட்டோம்'' என்று கூறினர். (இதையொட்டி) மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ் தன் தூதருக்கு, "(நபியே!) நீர் கூறுக: வஹீ மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது: மெய்யாகவே ஜின்கüல் சிலர் (இவ்வேதத்தைச்) செவியேற்றனர்...'' என்று தொடங்கும் இந்த (72ஆவது) அத்தியாயத்தை அருüனான்.
ஜின்கள் (தம் கூட்டத்தாரிடம்) கூறியதைப் பற்றி "வஹி'யின் மூலம்தான் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்  : புகாரி (4921)
திருக்குர்ஆன் வருவதற்கு முன்பு ஜின்களுக்கும் குறிகாரர்களுக்கும் இருந்த தொடர்பு குர்ஆன் அருளப்பட்ட பிறகு முற்றிலுமாக முறிக்கப்பட்டு விட்டது. தற்போது வானுலகத்தில் தீர்மாணிக்கப்படுகின்ற விஷயங்களில் ஓரிரு விஷயங்களைக் கூட ஜின்களின் மூலம் குறிகாரர்களால் அறிந்துகொள்ள முடியாது.

இவர்கள் குறிகாரர்களுக்கு ஜின்கள் மூலம் உதவிகள் கிடைக்கிறது என்ற இந்த ஆதாரத்தை வைத்துத் தான் ஸிஹ்ர் மூலம் பாதிப்புகளை செய்ய முடியும் என்றனர். இவர்கள் கூறுவது உண்மை என்று ஒரு வாதத்துக்காக வைத்துக் கொண்டாலும் நபிகள் நாயகம் காலத்துக்குப் பின்னர் அது தடுக்கப்பட்டு விட்டதால் இவர்கள் வாதம் சுக்குநூறாக நொறுங்கி விடுகின்றது.
குறிகாரர்களிடம் செல்வதும் அவர்களிடம் குறி கேட்பதும் இஸ்லாத்தில் வன்மையாகக் கண்டிக்கப்பட்டள்ளது. அவர்கள் கூறுவது உண்மை நம்புவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :
ஒருவர் குறிகாரனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை என்று நம்பினால் அவர் முஹம்மதுக்கு அருளப்பட்ட(இஸ்லாத்)தை விட்டும் நீங்கிவிட்டார்.
அறிவிப்பர் : அபூஹுரைரா (ரலி) அவர்கள்
நூல் : அபூதாவுத் (3405)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒருவர் சோதிடனிடம் சென்று, எதைப் பற்றியாவது கேட்டால், அ(வ்வாறு கேட்ட)வருடைய நாற்பது நாட்களின் தொழுகை அங்கீகரிக்கப்படுவதில்லை.
அறிவிப்பவர் ; ஸஃபிய்யா (ரலி)
நூல் : முஸ்லிம் (4488)

கண்டிதிருஷ்டி ஆதாரமாகுமா?

சூனியத்தில் புறச்சாதனங்கள் எதுவும் இல்லாமல் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்பதை நிரூபிக்க இயலாமல் ஜோசியத்துக்கு முதலில் தாவினார்கள். அடுத்து கண்டிதிருஷ்டிக்கு தாவியுள்ளார்கள்.
கண்ணேறு எப்படி தாக்கம் ஏற்படுத்தும் என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடியவில்லை. இது போன்று நம்மால் வெளிப்படையாக அறிந்து கொள்ள முடியாத ஒன்று சூனியத்திலும் இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.
நம்மால் வெளிப்படையாக அறிந்து கொள்ள முடியாத அம்சம் சூனியத்தில் இருக்கின்றது என இவர்களால் அடித்துச் சொல்ல முடியவில்லை. இருக்கலாம் என்று யூகம் தான் செய்ய முடிகின்றது. இந்த யூகத்துக்கு வலு சேர்க்க கண்ணேறு தொடர்பான ஹதீஸை இழுத்துக் கொண்டு வந்துள்ளனர்.
கண்ணேறு தொடர்பான ஹதீஸ்கள் பற்றி விரைவில் நாம் தெளிவான விளக்கத்தைத் தர இருக்கின்றோம். ஒரு பேச்சுக்கு கண்ணேறில் அதன் பாதிப்பை நம்மால் வெளிப்படையாக அறிய முடியவில்லை என்பதை ஏற்றுக் கொண்டாலும் இதனால் சூனியத்திலும் இந்த அம்சம் அடங்கியுள்ளது என்று கூற முடியாது.
கண்ணேறும் சூனியமும் வெவ்வேறான விசயங்கள் என்று இவர்களே நம்பும் போது கண்ணேறில் உள்ள அம்சத்தை சூனியத்தில் கொண்டு வந்து நுழைப்பது தவறாகும். இவர்களுடைய அனைத்து வாதங்களையும் கவனித்தால் இவர்கள் சம்பந்தமில்லாத செய்தியை ஆதாரமாகக் காட்டுவதும் பிறகு யூகத்தை நுழைப்பதும் தெரியவரும்.

அற்புதங்களை அற்பமாக்கிவிட்ட ஜாக்

நபிமார்கள் அற்புதங்களைக் கொண்டு வந்தபோது எதிரிகள் இதை சூனியம் என்று கூறி மறுத்தனர். அதாவது தந்திரம் செய்து அற்புதம் செய்வது போல் நம்மை ஏமாற்றுகிறார் என்ற கருத்தில் சிஹ்ர் என்ற சொல்லை எதிரிகள் பயன்படுத்தி வந்தனர் என்று நாம் கூறுகிறோம். இதற்குச் சான்றாக பல வசனங்களைக் குறிப்பிட்டு எழுதியுள்ளோம்.
எதிரிகள் சிஹ்ர் என்ற சொல்லை நாம் கூறிய கருத்தில் பயன்படுத்தவில்லை என்று ஜாக் மறுக்கின்றது. அப்படியானால் அவர்கள் எந்த அர்த்தத்தில் சொன்னார்கள்? ஜாக் கூறுவதைக் கேளுங்கள்.
நபி ஈசா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் அற்புதத்தால் பிறவிக் குருடருக்கு பார்வை கொடுத்தார்கள். குஷ்ட நோயாளியை குணமாக்கினார்கள். இதைப் பார்த்த எதிரிகள் இது தெளிவான சூனியம் என்று கூறினார்கள். மூசா (அலை) அவர்களின் கைத்தடி பாம்பாக மாறியது தெளிவான அற்புதம். ஆனால் அதையும் எதிரிகள் சூனியம் என்றே சொன்னார்கள்.
அற்புதத்தை தெளிவாக்க் கண்ணால் காணும் போது இது கண்கட்டி வித்தை என்று எதிரிகள் எப்படி சொல்லியிருப்பார்கள் என்று ஜாக் கேள்வி எழுப்புகிறது. இந்தக் கேள்விக்கு நாம் பதில் சொல்வதற்கு முன்னால் இவர்களின் அறியாமையை தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.
ஏதோ ஒரு மறைமுக சக்தியின் உதவியினால் சில ஆச்சரியமான காரியங்களை சூனியக்காரர்களால் செய்ய முடியும். அந்த சூனியக்காரர்கள் எந்தவித தெய்வ நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தாலும் இது சாத்தியம் என்று எதிரிகள் நம்பியிருந்தார்களாம்.
சுருக்கமாகச் சொல்வதென்றால் இறைத்தூதர் மட்டும் அற்புதம் செய்யமாட்டார். சூனியக்காரர்களும் அற்புதம் செய்வார்கள் என்று எதிரிகள் நம்பினார்கள் என இவர்கள் கூறுகின்றனர்.
இறைத்தூதர்களை மக்கள் நம்ப வேண்டும் என்பதற்காக எல்லா இறைத்தூதர்களுக்கும் அல்லாஹ் அற்புதங்களை வழங்கினான். இந்த அற்புதங்கள் மக்களை சத்தியத்தின் பக்கம் ஈர்க்கும் சக்தியாக இருந்தது.
இறைத் தூதராக இல்லாத சூனியக்காரர்களும் அற்புதம் செய்வார்கள் என மக்கள் நம்பினார்கள் என்றால் அல்லாஹ் கொடுத்தனுப்பிய அற்புதம் மக்களை எப்படி நேர்வழிக்கு கொண்டுவர உதவும்? இந்லையில் இறைத்தூதர் செய்து காட்டும் அனைத்து அற்புதங்களும் பயனற்று போகும்.
அல்லாஹ் குர்ஆனில் அற்புதங்களைப் பற்றி குறிப்பிடும் போது சான்றுகள் என்றும் ஆதாரங்கள் என்றும் கூறுகிறான். சூனியக்காரர்களும் அற்புதம் செய்வார்கள் என்று நம்பக்கூடிய மக்களிடம் இறைத்தூதர் அற்புதம் செய்துகாட்டினால் இந்த அற்புதம் அந்த மக்களுக்கு எப்படி சான்றாகவும் ஆதாரமாகவும் அமையும்?
எனவே இவ்வாறு கூறியதன் மூலம் அல்லாஹ்வும் அவனுடைய தூதர்களும் தேவையற்ற காரியத்தைச் செய்தார்கள் என ஜாக் கூற வருகின்றது.

மூசா நபி போட்டிக்கு ஒத்துக்கொண்டது ஏன்?

சூனியக்காரர்கள் அற்புதம் செய்வார்கள் என்ற நம்பிக்கை மக்களிடம் இருந்திருந்தால் ஃபிர்அவ்னின் சூனியக்காரர்கள் போட்டிக்கு வருமாறு மூசா நபியை அழைத்த போது அந்த அழைப்பை மூசா நபி ஏற்றிருக்க மாட்டார்கள்.
ஏனென்றால் போட்டியில் மூசா நபி வெற்றிபெற்றாலும் அவரை யாரும் நம்பப் போவதில்லை. வெற்றி பெற்றதால் திறமையான சூனியக்காரர் என்று மக்கள் சொல்வார்களே தவிர இறைத்தூதர் என்று கூறமாட்டார்கள்.
அப்படியானால் மூசா நபி எதற்கு போட்டி போட ஒத்துக் கொண்டார்கள். அல்லாஹ்வும் அந்த போட்டியில் கலந்துகொள்ளுமாறு மூச நபியிடம் ஏன் கூற வேண்டும்?
போட்டியில் வெற்றி பெற்றால் மூசா நபி இறைத்தூதர் என்பது தெளிவாகும் என்பதால் தான் அல்லாஹ் இவ்வாறு கூறினான். இதிலிருந்து சூனியக்காரர்கள் அற்புதம் செய்வார்கள் என்ற நம்பிக்கை எதிரிகளிடமிருந்தது என்ற கூற்று தவறானது என்பதை அறியலாம்.

சூனியக்காரர்கள் இஸ்லாத்தை ஏற்றது ஏன்?

மூசா (அலை) அவர்கள் செய்து காட்டிய அற்புதத்தைப் பார்த்தவுடன் போட்டியிட வந்த சூனியக்காரர்கள் மூசா (அலை) அவர்களை இறைத்தூதர் என்று ஏற்றுக் கொள்கிறார்கள். சஜ்தாவில் விழுந்து விடுகிறார்கள்.
சூனியக்காரர்களும் அற்புதம் செய்வார்கள் என்ற நம்பிக்கை எதிரிகளிடம் இருந்திருந்தால் இவர்கள் இஸ்லாத்தை ஏற்றிருக்க மாட்டார்கள். மூசா நம்மை விட பெரிய சூனியக்காரர் என்று கூறி மறுத்திருப்பார்கள்.
மூசா நம்மைப் போன்று ஒரு சூனியக்காரர் என்ற நம்பிக்கையில் தான் அவர்கள் மூசா நபியை போட்டிக்கு அழைத்தார்கள். பாம்பின் கால் பாம்பறியும் என்ற பழமொழிக்கு ஏற்ப சூனியக்காரன் யார்? என்பதை அவர்கள் நன்கு அறிந்து வைத்திருந்தனர்.
மூசா நபி செய்தது தாங்கள் செய்தது போன்று வித்தை அல்லாமல் தெளிவான அற்புதமாக இருந்ததாலும் இதை இறைத்தூதரைத் தவிர சூனியக்காரர்களாலும் செய்ய முடியாது என்று நம்பியதாலும் இஸ்லாத்திற்கு வந்தார்கள். ஜாக் இந்த விசயத்தை சிந்திக்க தவறிவிட்டது.

எதிரிகள் ஏன் மறுத்தார்கள்?

தெளிவாகத் தெரியும் அற்புதத்தை சூனியம் என்று கூறி எதிரிகள் ஏன் மறுக்க வேண்டும் என ஜாக் கேட்ட கேள்விக்கு வருவோம்.

நபிமார்கள் செய்து காட்டிய அற்புதம் எதிரி உட்பட அனைவரும் நம்பும் வகையில் சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாக இருந்தது. எதிரிகள் அனைவரும் இவர் இறைத்தூதர் தான் என்பதை நன்கு விளங்கி வைத்திருந்தனர். மனமுரண்டாகத் தான் மறுத்துக்கொண்டிருந்தனர்.
அதாவது நபிமார்கள் செய்த அற்புதங்களைப் பார்த்த பிறகு அவர் நபி என்றும் அவர் செய்துகாட்டியது அற்புதம் என்றும் இது போன்று வேறு யாராலும் செய்ய முடியாது என்றும் எதிரிகள் நம்பினர்.
ஆனால் பதவி அந்தஸ்து முன்னோர்களின் வழி ஆகிய காரணங்களால் சத்தியம் விளங்கிய பிறகும் சத்தியத்திற்கு வர மறுத்தனர். இன்றைக்கு பலர் இதுபோன்று இருப்பதைப் பார்க்கின்றோம். பின்வரும் வசனங்கள் இதைத் தெளிவுபடுத்துகின்றது.
நமது சான்றுகள் பார்க்கக் கூடிய வகையில் அவர்களிடம் வந்த போது "இது தெளிவான சூனியம்'' என்று அவர்கள் கூறினர். அவர்கள் அதை உறுதியாக நம்பியிருந்தும் அநியாயமாகவும், ஆணவமாகவும் மறுத்தனர். "குழப்பம் செய்தோரின் முடிவு எவ்வாறு இருந்தது?'' என்று கவனிப்பீராக!
அல்குர்ஆன் (27 : 13)
தெளிவான ஒன்பது சான்றுகளை மூஸாவுக்கு வழங்கினோம். அவர்களிடம் அவர் வந்த போது (நடந்ததை) இஸ்ராயீலின் மக்களிடம் கேட்பீராக! "மூஸாவே! உம்மை சூனியம் செய்யப்பட்டவராகவே நான் கருதுகிறேன்'' என்று அப்போது அவரிடம் ஃபிர்அவ்ன் கூறினான்.
"வானங்களுக்கும், பூமிக்கும் அதிபதியே இவற்றைச் சான்றுகளாக அருளியுள்ளான் என்பதை நீ அறிந்திருக்கிறாய். ஃபிர்அவ்னே! நீ அழிக்கப்படுபவன் என்றே நான் கருதுகிறேன்'' என்று அவர் கூறினார்.
அல்குர்ஆன் (17 : 102)
எனவே சூனியக்காரர்களால் அற்புதம் செய்ய முடியும் என்ற கருத்தில் சிஹ்ர் என்ற வார்த்தையை எதிரிகள் பயன்படுத்தவில்லை என்று மேற்கண்ட ஆதாரங்களின் மூலம் தெளிவாகிவிட்டது.
சூனியம் என்பது பொய்யும் பித்தலாட்டமும் அடங்கிய கலை என்பதற்கு ஏராளமான குர்ஆன் வசனங்கள் ஆதாரங்களாக மக்களுக்கு மத்தியில் வைத்துள்ளோம். இதழ்கள் வாயிலாகவும் இணையதளத்தின் வாயிலாகவும் இதைத் தெளிவுபடுத்தி இருக்கின்றோம்.
ஜாக் இந்த ஆதாரங்களில் எந்த ஒன்றுக்கும் பதில் கொடுக்கவில்லை. ஆய்வு என்ற பெயரில் உளறிக்கொட்டியது தான் மிச்சம். இந்த லட்சணத்தில் இந்த ஆய்வை தொடரப்போவதாக வேறு அறிவித்துள்ளது.
இறுதியாக நாம் சொல்வது என்னவென்றால் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் சொன்னதை அப்படியே ஏற்போம். அவர்கள் கூறாத நம்முடைய சொந்த கற்பனைகளை மார்க்கத்தில் நுழைத்து மூட நம்பிக்கைகள் பரவ நாம் காரணமாகிவிடக்கூடாது. அல்லாஹ் நம்மை இதை விட்டும் பாதுகாப்பானாக.

Jun 21, 2012

இலங்கை மத்ரஸாக்களின் இன்றைய நிலை (?)

இஸ்லாமிய மார்க்கத்தை மக்களிடம் எத்தி வைக்க வேண்டும் என்பதற்காக பண்னெடுங் காலமாக நம் மத்தியில் பல அரபிக் கல்லூரிகள் தோற்றம் பெற்று பல்லாயிரக் கணக்கான ஆலிம்களை உருவாக்கியிருக்கிறது, உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

இந்தக் கல்லூரிகளின் நிலைமைகள், கொள்கைகளை மிகவும் ஆழமாகவும், தெளிவாகவும் பொது மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.
ஏன் என்றால் இன்று நமக்கு மத்தியில் மார்க்கப் பிரச்சாரத்திற்கு பாடுபடுவதாக பிதற்றிக் கொள்ளும் பல கல்லூரிகள் ஆலிம்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாகத் தான் இருக்கின்றன என்பதே உண்மை.
வருடத்திற்கு இத்தனை பேரை உருவாக்கினோம், இந்த வருடம் இத்தனை பேர் பட்டம் பெற்றார்கள், இந்தனை பேர் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு தெரிவானார்கள் என்ற வரி விளப்பரத்திற்காக போராடும் பல கல்லூரிகள் நமக்கு மத்தியில் இருப்பதைப் பார்க்கிறோம்.
அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுவோர் அறிஞர்களே.அல்லாஹ் மிகைத்தவன் மன்னிப்பவன்.(35:28)
அல்லாஹ் உலகில் படைத்தவர்களில் மிகவும் அவனை அஞ்சுபவர்கள் அறிஞர்கள் தான் என்று இறைவன் மேற்கண்ட வசனத்தில் தெளிவுபடுத்துகிறான்.ஆனால் இன்றைய நிலையோ இதற்கு நேர் மாற்றமாக இருப்பதைப் பார்க்கிறோம்.
தங்களை அறிஞர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கும் இறையச்சத்திற்கும் தொடர்பிருக்கிறதா என்று சந்தேகப்படவேண்டியுள்ளது. தனது இளமைக் கல்வியை சிறந்த முறையில் மார்க்கத்தின் நிழலில்  அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் அரபிக் கல்லூரிகளைத் தேடி வரும் சிறார்கள் மார்க்கத்தின் பெயரால் ஏமாற்றுக் கல்வி புகட்டப்படுகிறார்கள்.
மட்டுமன்றி ஏமாற்றுக் கல்விக்கு வேட்டு வைக்கிறோம் என்று கிளம்மி ஏகத்துவக் கல்லூரிகள் நடத்துவதற்கு தயாரான எத்தனையோ பேர் அவற்றை தமது பிழைப்புக்குறிய வழியாக மாற்றியிருப்பதைக் காண முடிகிறது.
ஏழு வருடங்கள், ஐந்து வருடங்கள் என்று பாடத்திட்டத்தை அமைத்துள்ள எத்தனையோ மத்ரஸாக்கள் தனது கல்லூரி மாணவர்களுக்கு இஸ்லாத்தின் சரியான அடிப்படையைக் சொல்லிக் கொடுப்பதில்லை.
ஷாபி என்றும் ஹனபி என்றும் மத்ஹபுகளுக்கு வக்காளத்து வாங்கும் இவர்கள் மத்ஹபு தொடர்புடைய நூல்களைத் தான் பாடத்திட்டத்தில் கூட சேர்திருப்பார்கள்.இவர்களினால் உருவாக்கப்பட்டு வரும் இந்த மாணவர்களின் எதிர்காலம் என்னவாகிறது?
மரண வீட்டில் யாசீன் ஓதுவதும், காலத்திற்குக் காலம் மவ்லிது ஓதுவதும் தான் இவர்களின் பிழைப்பாக மாறுகிறது.
தவ்ஹீத் போர்வையில் உருவான அரபிக் கல்லூரிகளின் இன்றைய அவல நிலை (?)
மார்க்கத்தை அதன் தூய வடிவில் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக இலங்கைத் திரு நாட்டில் பல ஏகத்துவக் கல்லூரிகள் கால் பதித்தன. அவற்றில் பல தற்போது இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன என்பது தனிக்கதை.
சில கல்லூரிகள் இன்றிருந்தாலும் அவற்றின் சமூகப்பணி (?) பெரும் கவலையளிப்பதாகத் தான் இருக்கிறது.
தெளிவான மார்க்க அறிஞர்களாக மாணவர்களை உருவாக்குகிறோமோ இல்லையோ பி.ஏ பட்டதாரிகளாக மாற்றிவிட வேண்டும் என்பதே இந்தக் கல்லூரிகளின் நவீன பாடத்திட்டமாக இருக்கிறது.
பட்டதாரிகள் உருவாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அது தான் முழு நேரப்பணியாக மாறி மார்க்கக் கல்வி பகுதி நேரமாக இந்த கல்லூரிகளில் மாறிவிட்டதே கவலையளிக்கிறது.
உங்களில் நம்பிக்கை கொண்டோருக்கும், கல்வி வழங்கப்பட்டோருக்கும் அல்லாஹ் பல தகுதிகளை உயர்த்துவான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.(58:11)
அல்லாஹ்விடத்தில் உயரிய தகுதியை நாம் அடைய வேண்டுமென்றால் அவனை நம்புவதைப் போல் அவனுடைய மார்க்கத்தையும் தெளிவாக அறிந்திருக்க வேண்டும் என்று மேற்கண்ட வசனம் நமக்கு எடுத்தியம்புகிறது.
ஆனால் இந்த மார்க்கக் கல்வியின் தேவை இன்று குழி தோண்டிப் புதைக்கப்படுவதை கண்முன் காணக்கூடியதாக இருக்கிறது.
அரபு நாட்டுப் பணத்தை நம்பி ஆரம்பிக்கப்பட்ட பல கல்லூரிகளை இன்று காணக்கிடைப்பதில்லை.ஒன்றிரண்டு ஆங்காங்கே இருந்தாலும் அவற்றிற்கும் மார்க்கப்பிரச்சாரத்திற்கும், கொள்கை உறுதிக்கும் தொடர்பில்லை.
பரகஹதெனிய அஸ்ஸலபிய்யா, மஹரகம கபூரிய்யா, காலியில் இருக்கும் இப்னு அப்பாஸ், பாலமுனை ஸஹ்வா போன்ற எத்தனையோ அரபிக் கல்லூரிகளை தவ்ஹீத் பேர் தாங்கி கல்லூரிகளாகவே எண்ணத் தோன்றுகிறது. 
குர்ஆனையும்,ஹதீஸையும் மாத்திரம் போதிப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்தக் கல்லூரிகளில் பெரும்பாலான பாடத்திட்டங்களில் மத்ஹபு நூல்களே குடி கொண்டுள்ளன.
இன்று வரைக்கும் பிக்கு, தப்ஸீர் என்று இவர்கள் எதைப் படித்துக் கொடுத்தாலும் அந்தப் பாடத்திட்டம் மத்ஹபு சார்ந்ததாகத் தான் இருக்கிறது.
பெயருக்கு குர்ஆன், ஹதீஸ் என்று பேனர் போட்டுக் கொள்வதுதான் இவர்களின் வேலையாக இருக்கிறது.
இஸ்லாமிய அகீதாவை சரியாக மக்கள் மத்தியில் எத்தி வைக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட இந்தக் கல்லூரிகளில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மத்தியில் உள்ள தொடர்பைப் பார்த்தாலே இந்தக் கல்லூரிகளில் ஏகத்துவத்தின் நிலையை அடையாளம் காண முடியும்.
ஆசிரியர்களைக் கண்டால் ஆறுக்கு மடியும் மாணவர்கள், வகுப்பறைக்குள் ஆசிரியர் நுழையும் போது எழுந்து நிற்கப் பழக்கப்பட்டிருப்பதும் இவர்களின் தவ்ஹீதின்(?) உச்ச கட்டம் எனலாம்.
நபியவர்கள் வரும் போதே நபித் தோழர்கள் அமர்ந்த வண்ணம் தான் இருந்ததாக ஹதீஸ்கள் கூறுகின்றன ஆனால் இவர்கள் வரும் போது மாணவர்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று இந்தக் கல்லூரிகளின் சட்டம் சொல்கிறது.
ஸலபிகள் என்ற பெயரால் மூலைச் சலவை செய்யப்படும் இந்த அப்பாவி மாணவர்கள் இவர்களைப் போலவே குர்ஆன்,ஹதீஸ{டன் மூன்றாவதாக ஸலபிகளையும் ஆதாரங்களாக எடுக்கும் ஆத்மீகக் கொள்கையிலேயே வளர்க்கப்படுகிறார்கள்.
கொள்கையில்லை, கோட்பாடு இல்லை, கொண்ட கொள்கையில் தெளிவில்லை மக்கள் மத்தியில் சத்தியக் கொள்கையை உடைத்துச் சொல்ல தைரியமில்லை ஆனால் இவர்கள் கொள்கை பேசுவதில் வள்ளவர்களாம்.
இந்த தவ்ஹீத் பெயர் தாங்கி கல்லூரிகளின் அதிபர், ஆசான்கள் தங்கள் மத்ரஸா வளாகத்திற்குள் பள்ளியைக் கட்டி வைத்துக் கொண்டு பித்அத் வாதியின் பள்ளிக்கு ஜும்மாவிற்கு தாங்களும் சென்று தங்கள் மாணவர்களையும் அழைத்துச் செல்கிறார்கள். தங்கள் மத்ரஸாவில் இருக்கும் பள்ளியில் ஒரு ஜும்ஆ நடத்துவதற்கு இவர்களுக்கு திராணியில்லாமல் போய்விட்டது தான் கவலை.
என்று நீங்குமோ இந்த அவல நிலை.
நாம் அறிந்தவரை காலி இப்னு அப்பாஸ் போன்ற மத்ரஸாக்களில் இன்னும் மத்ரஸா வளாகத்தில் ஜும்மா தொழுகை கிடையாது. மார்க்கத்திற்கு முரனான, பித்அத் நடக்கும் பள்ளியில் தான் இது வரைக்கும் அவர்கள் ஜும்மா தொழுகிறார்கள் என்பதே உண்மை.
தவ்ஹீத் வாதிகளாக தம்மை காட்டிக்கொள்ள முயலும் இந்த மத்ரஸாவின் ஆசிரியர் குழாமும், நிர்வாகமும் உண்மையில் ஜமாத்தே இஸ்லாமியை ஆதரிக்கும் போலி தவ்ஹீத் வாதிகள் என்பதே உண்மை.
தங்கள் கல்லூரிகளின் பட்டமளிப்பு விழாக்களுக்கு விஷேட அதிதிகளாக ஜமாத்தே இஸ்லாமியின் அமீரை அழைத்து விருந்து வைப்பதும், தங்கள் இணையதளங்களில் அவர்களின் ஆசிச் செய்திகளை வெளியிடுவதும், அவர்களின் கல்லூரிகளில் இவர்களும் சென்று பகுதி நேர பாடம் நடத்துவதும் தற்போது வழமையாகிவிட்ட கதைதான்.
தங்கள் பிழைப்புக்காக ஒரு காலத்தில் கத்தம், பாத்திஹா ஓதிய மவ்லவிமார்களைப் பார்த்தோம்.
தங்கள் பிழைப்பிற்காக கொண்ட கொள்கையையே அடகு வைப்பவர்களை தற்காலத்தில் பார்க்கிறோம். இவர்களின் இந்த செயல்பாட்டால் மீண்டும் மத்ஹபு கொள்கைக்கு வக்காலத்து வாங்கும் மவ்லவிமார்கள் உற்பத்தி செய்யப்படுகிறார்களே தவிர குர்ஆன் சுன்னாவை பேசுபவர்கள் களத்தில் இருப்பது அரிதாகவே உள்ளது.
தூய இஸ்லாத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் மேலிடுகின்ற காரணத்தினால் தான் பல சகோதரர்கள் தங்கள் பிள்ளைகளையும் அரபிக் கல்லூரிகளில் சேர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, பல சிரமங்களுக்கு மத்தியிலும் பிள்ளைக்காக செலவு செய்கிறார்கள்.
ஆனால், இப்படி அவர்கள் செலவு செய்வதற்குறிய பலன் கிடைப்பதென்பது மிக மிக அரிதாகத்தான் உள்ளது. காரணம் மத்ரஸாக்கள் தங்கள் திட்டங்களை செயல்படுத்துவதில் விடும் பிழைகள், அல்லது பிழையான திட்டங்கள் என்றுகூட சொல்ல முடியும்.
சிறந்த பிரச்சாரகர்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட கல்லூரிகளின் திட்டங்கள் கூட சரியான இஸ்லாமிய அகீதாவின் அடிப்படையில் இல்லை என்பதே உண்மை.அது மட்டுமின்றி இன்னும் சில கல்லூரிகள் தங்கள் முழு நேர பணியாக உலகக் கல்வியைத் தான் முக்கியத்துவப்படுத்துகிறார்களே தவிர மார்க்கக் கல்வியை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக சரியான முறையில் அதற்கான திட்டங்களைத் தீட்டவும் இல்லை செயல்படுத்தவும் இல்லை.
உலகக் கல்வி எங்கள் கல்லூரியில் இருக்கிறது என்பதை வெளிக்காட்டுவதற்காக செய்யும் விளம்பரத்தின் பாதியைக் கூட சரியான கொள்கை அடிப்படையில் மார்க்கக் கல்வியையும் நாம் மாணவர்களுக்கு கொடுக்கிறோம் என்று விளம்பரப்படுத்தவில்லை. சில கல்லூரிகள் அப்படி விளம்பரம் செய்தாலும் கல்லூரி நிர்வாகத்தையும், ஆசிரியர்களையும் கவணித்தாலே மார்க்கக் கல்வியில் இவர்கள் எடுத்து வைக்கும் முதல் படியே தவறு என்பது வெளிச்சமாகிவிடுகிறது.
நிர்வாகச் சட்டத்திற்காக மார்க்கத்தை புறக்கணிக்களாமா?
மார்க்கம் போதிக்கும் கல்லூரிகளாக இன்று மக்கள் மத்தியில் இனம் காணப்பட்டுள்ள பல கல்லூரிகள் தங்களின் நிர்வாகச் சட்டத்திற்காக மார்க்கச் சட்டங்களையே புறந்தள்ளி விடுவதைப் பார்க்கிறோம்.
மார்க்கத்தை முற்படுத்தி கல்லூரியின் நிர்வாகச் சட்டம் தவறாக இருக்கிறது என்று யாராவது சுட்டிக்காட்டினால் அந்த மாணவன் கல்லூரியை விட்டே நீக்கப்படுகிறான். அல்லது இதன் பின்பு கல்லூரியின் சட்டத்திற்கு மாற்றம் செய்யமாட்டேன் என்று பெற்றோர் முன்னிலையில் கடிதம் எழுதிக் கேட்டு மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படுகிறான். இதை எந்தக் கல்லூரி நிர்வாகமும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது.
மார்க்கத்தை நடைமுறைப் படுத்துவதற்காகத் தான் மத்ரஸாக்களே என்றால் அந்த மார்க்கத்தை பேசியதினால் மாணவர்களுக்கு இப்படிப்பட்ட நிலை என்பது மிகவும் பெரிய சோகக் கதைதான்.
அரபியில் மேதைகள்(?) மார்க்கத்தில் பேதைகள். 
மார்க்கத்தை சரியாக புரிய வேண்டும் என்பதற்காக மத்ரஸாக்களில் இணையும் பல மாணவர்களுக்கு அரபி பாசையை படித்துக் கொடுக்கிறார்கள். ஆனால், அந்த பாசையின் மூலம் சரியான கொள்கையை எப்படி அடையாளம் காண்பது என்பதைப் பற்றி அதிகமான கல்லூரிகள் கற்றுக் கொடுப்பதில்லை.
உதாரணத்திற்கு இன்றிருக்கும் கல்லூரிகளில் பல கல்லூரிகள் அரபி சஞ்சிகைகளை மொழியாக்கம் செய்வதற்கும், அரபியில் கட்டுரைகள் எழுதுவதற்கும் பயிற்சிகள் கொடுக்கிறார்கள். கண்டிப்பாக செய்ய வேண்டிய ஒன்றுதான் ஆனால், இதை விடவும் முக்கியம் அரபி பாசையைப் படித்த மாணவன் மிகத் தெளிவாக குர்ஆனையும், சுன்னாவையும் விளங்க வேண்டும் என்பது.
இதற்கான வழிகாட்டுதல்கள் எத்தனை மத்ரஸாக்களில் கொடுக்கப்படுகிறது என்பதை ஆராய்ந்து பாருங்கள்.
தங்கள் யாரை தக்லீத் (தனிமனித வழிபாடு) செய்கிறார்களோ அந்த அறிஞர்களின் கருத்துக்கள் மக்கள் மத்தியில் போய்ச் சேர வேண்டும் என்பதற்காக அல்லது தமது கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் குறிப்பிட்ட அறிஞர்களின் கருத்துக்களை எதிர்க்கக் கூடாது அதை அப்படியே எடுத்து நடக்க வேண்டும் என்பதற்காக மூலைச் சலவை செய்யப்படுவதைப் பார்க்கிறோம்.
பேருவலையில் அமைந்திருக்கும் ஜாமியா நளீமியா போன்ற கலாசாலைகளும், மாதம்பையில் அமைந்துள்ள இஸ்லாஹிய்யா போன்ற மத்ரஸாக்களும், ஸவூதிய முப்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தவ்ஹீத் மத்ரஸாக்களும் இதற்கு சிறந்த உதாரணங்களாகும்.
(மத்ரஸாக்களில் ஒழுக்க விழுமியங்கள் தொடர்பாக பல பிரச்சினைகள் இருந்த போதிலும் எதிர்கால இலங்கை முஸ்லீம்களின் நிலையைக் கருத்தில் கொண்டு அவற்றை எழுத்தில் கொண்டுவருவதைத் தவிர்க்கிறோம்)
பெண்கள் கல்லூரிகளும், புரிய வேண்டிய செய்திகளும்.
ஆண்கள் கல்லூரிகளின் தற்கால நிலையைப் பற்றிய செய்திகளை தெரிந்து கொள்வதோடு பெண்கள் கல்லூரிகளினதும் உண்மை நிலை பற்றி நாம் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.
பெண்கள் மத்தியில் இருக்கும் மூடத்தனத்தை இல்லாமலாக்கி, மார்க்கத்தின்பால் அவர்களை விழிப்புணர்வூட்டி சமுதாயத்தில் சிறந்த வழிகாட்டிகளாக அவர்களை ஆக்க வேண்டும் என்பது கட்டாயக் கடமையாகும். அந்தக் கடமையை சரிவர செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் பெண்கள் கல்லூரிகளும் உருவாக்கப்பட்டது. அப்படி உருவாக்கப்பட்ட கல்லூரிகளின் நிலைகளோ மிகவும் கவலைக்கிடமாகத்தான் இருக்கிறது.
பெண்கள் கல்லூரிகளில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக பேசப்படுபவைகள் சிலவைகள் தாம். அந்த சில கல்லூரிகளில் கூட பல பிரச்சினைகளும், ஆண்கள் கல்லூரிகளின் இருக்கும் அகீதா ரீதியிலான சிக்கல்களைப் போன்ற பல செய்திகளும் உள்ளடக்கம்.
பெண்கள் கல்லூரி என்றவுடன் அநேகருக்கு நினைவிற்கு வருவது கல்லெளியவில் அமைந்திருக்கும் பெண்கள் கல்லூரிதான். இந்தக் கல்லூரி பல வருடங்களாக இயங்கிய போதும் இதிலிருந்து வெளியேறிய ஆலிமாக்களில் விரல் விட்டு எண்ணப்படும் அளவிற்குள்ளவர்களைத் தவிர வேறு யாரையும் பிரச்சாரக் களத்தில் காண முடியவில்லை.
அப்படி பிரச்சாரக் களத்தில் இருப்பவர்கள் கூட மார்க்க விஷயத்தில் சரியான தெளிவில்லாதவர்களாகத்தான் இருக்கிறார்கள்.
நான் தவ்ஹீத்வாதி, சொல்லும் சட்டம் மத்ஹபுக்குறியது என்பதுதான் இவர்களின் நிலையாக உள்ளது.
இது தவிர மல்வானை பின் பாஸ் பெண்கள் கல்லூரி, ஆயிஷா ஸித்தீகா பெண்கள் கல்லூரி, இஸ்லாஹிய்யா பெண்கள் கல்லூரி போன்றவற்றின் நிலையும் இது போன்றதுதான்.
(பேர் குறிப்பிடாத இன்னும் பல கல்லூரிகளினதும் நிலை இதுதான். வட கிழக்கு மாகாணம், தென் மாகாணம் போன்ற பகுதிகளில் இதே நிலையில் பல கல்லூரிகள் காணப்படுகின்றன).
படித்தவர்களில் பலர் களத்தில் இல்லை, இருப்பவர்களில் பலருக்கு இஸ்லாமியத் தெளிவு இல்லை.
சிறந்த தாய் என்ற கோஷம்.
சிறந்த தாயையும் மிகச் சிறந்த பிரச்சாரகரையும் உருவாக்கப் போகிறோம் என்ற நோக்கில் தான் மேற்கண்ட கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டன, காலப் போக்கில் இரண்டும் கெட்டான் நிலைதான் உருவாகியுள்ளது.
சிறந்த தாய் கோஷத்தில் உருவாக்கப்பட்ட கல்லூரிகளில் எத்தனையோ கல்லூரிகள் ஒழுக்கத்திலேயே கேள்விக் குறியாக உள்ளன என்பது ஒரு கசப்பான உண்மையாகும்.
மார்க்கத்திற்கு மாற்றமாக பாடத்திட்டங்கள்.
ஆண்கள் கல்லூரிகளைப் போலவே பெண்கள் கல்லூரிகளினதும் பாடத்திட்டங்கள் மத்ஹபை அடிப்படையாகக் கொண்டவைகளாகத் தான் இருக்கின்றன.
எந்த மத்ஹபுகள் குப்பைகள் என்று சொன்னார்களோ அதே குப்பைகளை பாடத்திட்டத்தில் வைத்திருப்பது கவலைக்குறியதே!
ஆண்களே கேட்க சகிக்காத கருத்துக்கள் நிறைந்திருக்கும் இத்தகைய நூல்களை பாடத்திட்டத்தில் வைத்துவிட்டு சிறந்த தாயை உருவாக்கப் போகிறோம் என்று தாளம் போடுவது எந்த விதத்தில் நியாயம்?
அது மாத்திரமன்றி சில கல்லூரிகளில் நபியவர்களின் ஹதீஸ்களைப் பற்றிய சிறு ஞானம் கூட இல்லாத பாடத்திட்டம் வகுக்கப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.
அரபிக் கல்லூரிகளும், ஆசிரியர்களும்.
மாணவர்கள் சிறந்த சமுதாயமாக உருவாக்கப்பட வேண்டுமாயின் கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் மார்க்க விஷயத்தில் தெளிவுள்ளவர்களாகவும், திறமையானவர்களாகவும் இருப்பது கட்டாயமாகும். இன்றைக்கு நம்மத்தியில் இருக்கும் ஆண்கள் கல்லூரிகளானாலும், பெண்கள் கல்லூரிகளானாலும் அவற்றில் கல்வி கற்றுக் கொடுக்கும் பெரும்பாலான ஆரியர்களுக்கு மார்க்கத்தில் தெளிவில்லை என்பதே உண்மை இது கல்லூரி நிர்வாகம் மறுத்தாலும், மறைத்தாலும் இதுதான் உண்மை.
வெளிநாட்டு மத்ரஸாக்களில் பட்டம் பெற்றவர்களை நாங்கள் ஆசிரியர்களாக வைத்திருக்கிறோம் என்று பறைசாற்றும் எத்தனையோ கல்லூரிகள் இன்னும் மத்ஹபு குப்பைகளிலும், அரபி உலமாக்களினது ஆக்கங்களிலுமே தமக்குத் தேவையான மார்க்க ஆதாரங்களைத் தேடுகின்றனவே தவிர குர்ஆன், ஹதீஸில் தேடுவதில்லை.
கல்லூரி நிர்வாகத்தினரே!
மத்ரஸாக்களை நடத்தும் கல்லூரி நிர்வாகிகளே !
உங்கள் நோக்கம் தூய்மையானதாக இருந்தால், சரியான கொள்கை அடிப்படையில் அமைந்த பாடத்திட்டத்தை நடை முறைப்படுத்துங்கள், மார்க்கக் கல்வியில் தேர்ச்சி பேற்ற தூய இஸ்லாத்தை அதன் தூய வடிவில் பரப்ப வேண்டும் என்ற நன்நோக்கம் கொண்டவர்களை ஆசிரியர்களாக நியமனம் செய்யுங்கள். இன்றில்லாவிட்டாலும் எதிர்காலத்திலாவது சரியான கொள்கைகளைப் பேசும் ஆலிம்கள் தோற்றம் பெருவதற்கு அது ஒரு அடிப்படையாக அமையும் இன்ஷா அல்லாஹ்.

Jun 19, 2012

DR.ஸாகிர் நாயிக் கொள்கை வாதியா? முழப்ப வாதியா?

இலங்கை வாழ் முஸ்லிம்களின் பெரும்பான்மையினரிடம் இடம் பிடித்திருக்கும் DR.ஸாகிர் நாயிக்கின் உண்மை முகத்தை எடுத்துக் காட்டும் ஒரு கருத்துப் பரிமாற்றம் 2009ஆம் ஆண்டளவில் ஆன்லைன் பீஜே இணையத்தளத்தில் நடைபெற்றது. வெளித் தோற்றத்தை பார்த்து ஹீரோவாக மதிக்கப்படும் டாக்டர் அவர்கள் வெறும் ஸீரோ தான் என்பதனை இக்கருத்துப் பரிமாற்றம் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. அவரின் பிரச்சாரத்தில் மதிமயங்கிப் போயுள்ள இலங்கை மக்கள் விளிப்புணர்வடைய எமது தளத்திலும் இதனை எவளியிடுகிறோம்.

 கேள்வி:
நீங்கள் dr.சாகிர் நாயக் அவர்களை காபிர் என்று சொன்னதாக ஒரு தமுமுக சார்ந்த சகோதரர் கூறுகிறார் உங்கள் பதில் என்ன டாக்டர் சாகிர் நாயக் அவர்களை பற்றி உங்கள் கருத்து என்ன ?

எந்தத் தனி நபரைப் பற்றியும் குறிப்பாக ஜாகிர் நாயக்கைப் பற்றி காஃபிர் என்று நாம் கூறியதில்லை. மார்க்கம் தொடர்பாக அவரது பல நிலைபாடுகளில் நாம் மாறுபடுகிறோம்முஸ்லிமல்லாத மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போது குர்ஆன் ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என்று அவர் பேசுகிறார். குர்ஆன் ஹதீஸில் இல்லாமல் பின்னர் உருவாக்கப்பட்டவை குறித்து கேள்வி கேட்டால் அதை நியாயப்படுத்த முடியாது என்பதால் இந்த நிலைபாட்டை எடுக்கிறார்.

ஆனால் பெரும்பாலான முஸ்லிம்கள் மத்ஹப். இஜ்மா கியாஸ் போன்றவற்றை ஆதரிப்பவர்களாக உள்ளதால் முஸ்லிம்களின் சபைகளில் இவற்றை நியாயப்படுத்தி பேசுகிறார். இது போன்ற இரட்டை நிலை மேற்கொள்வோரை நம்பக் கூடாது என்பதைப் பல சந்தர்ப்பங்களில் நாம் விளக்கியுள்ளோம்.

அது போல் அறிவுப்பூர்வமாக இஸ்லாத்தை விளக்குகிறேன் என்ற பெயரில் பல சந்தர்ப்பங்களில் தவறாகக் கூறி இருக்கிறார். உதாரணமாக والأرض بعد ذلك دحاها79:30 வசனத்தில் பூமியை இதன் பின் விரித்தான் என்று கூறப்படுகிறது. இந்த வசனத்தில் தஹாஹா என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதைப் பற்றி இவர் குறிப்பிடும் போது தஹா என்றால் முட்டை என்று பொருள். பூமி முட்டை வடிவில் இருப்பதை அன்றே குர்ஆன் கூறி விட்டது என்று கூறுகிறார்.

அரபு மொழி அறியாதவர்கள் ஆஹா ஓஹோ என்று இதைப் புகழ்வார்கள். இவர் கூறுகிறபடி தஹாஹாவுக்குப் பொருள் செய்தால் அதன் பின் பூமியை அவன் முட்டை என்று வரும். குர்ஆனைக் கேலிக் கூத்தாகுகிறார் என்று தான் அரபு மொழி அறிந்தவர்கள் கூறுவார்கள். தஹா என்பது வினைச் சொல்லாகும். அதன் பொருள் விரித்தான் என்பதாகும். வினைச் சொல்லுக்கு முட்டை என்று பொருள் கொள்வது அறியாமையாகும். இது போல் இவர் தப்பும் தவறுமாக எழுதியதைக் குறித்து சுமார் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் நெல்லை ஏர்வாடியைச் சேர்ந்த ஒரு பெரியவர் டாக்டர் பக்ருத்தீன் அவர்கள் என்னிடம் கேட்ட போது ஜாகிர் நாயக் தவறுகளைப் பட்டியல் போட்டு அவரிடமே விளக்கம் கேளுங்கள் என்று கூறினேன். ஆங்கிலப்புலமை உடைய அவர் ஆங்கிலத்த்தில் ஜாகிர் நாயக்கின் தவறுகளைச் சுட்டிக்காட்டி நேரடியாகக் கடிதம் எழுதினார். அதன் நகலையும் எனக்கு அனுப்பினார். ஆனால் ஜாகிர் நாயக்கிடமிருந்து பதில் வரவில்லை. மீண்டும் அந்தப் பெரியவர் நினைவூட்டல் கடிதம் எழுதியும் பதில் இல்லை என்று அவர் என்னிடம் தெரிவித்தார்.

(அப்பெரியவர் இதை வாசிக்க நேர்ந்து அந்தக் கடிதம் அவரிடம் இருந்தால் அனுப்பி உதவுமாறு வேண்டுகிறேன்.) அந்தப் பெரியவர் மூலம் சுட்டிக்காட்டப்பட்ட தவறுகள் உண்மையில் தவறுகள் அல்ல என்றிருந்தால் அதை ஜாகிர் நாயக் விளக்கி இருக்க வேண்டும். அல்லது நீங்கள் சுட்டிக்காட்டிய தவறுகளை இனிமேல் திருத்திக் கொள்கிறேன் என்று கூறி இருக்க வேண்டும்.

தவறை ஒப்புக் கொண்டால் தன் இமேஜ் பாதிக்கப்படும் என்று நினைப்பவர் மார்க்கத்தில் நம்பகமானவர் அல்ல என்று பல சந்தர்ப்பங்களில் அவரைப் பற்றி நான் விமர்சித்துள்ளேன்.

இதன் பின்னர் அவர் சென்னை வந்த போது அவருடைய முரண்பட்ட கருத்துக்கள் பற்றி அவருடன் விவாதிக்க முயன்ற போது அவர் மறுத்து விட்டார். இப்போதைய தமுமுக தலைவர், பொதுச் செயலாளர், இப்போது தமுமுகவின் மாநில நிர்வாகிகளில் ஒருவராக உள்ள ஜிப்ரீ காசிம் ஆகியோர் இதற்கு முயற்சித்தனர். ஆனால் இம்மூவரும் இப்போது இதை ஒப்புக் கொள்வார்களா மறுப்பார்களா என்று எனக்குத் தெரியாது. ஆனால் ஜாகிர் நாயக் குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமாகப் பேசியுள்ள பல விஷயங்கள் பற்றி நான் அவருடன் விவாதிக்கத் தயார் என்பதால் நீங்களே முயற்சித்துப் பார்த்து அறிந்து கொள்ளலாம்.

மேலும் இயேசு இறை மகனா என்று நான் எழுதிய நூலை ஆங்கிலத்திலும் மொழி மாற்றம் செய்து வெளியிட்டேன். அந்த நூலை ஜாகிர் நாயக் சென்னை வந்த போது என் சார்பில் பாக்கர் மூலம் கொடுத்து அனுப்பினேன். இதன் பின்னர் ஆறு மாதம் கழித்து ஜாகிர் நாயக் சகோதரர் அல்லது உறவினர் பெயரில் இயேசு இறை மகனா என்பது குறித்து ஒரு நூல் ஜாகிர் நாயக் அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டது. அது அப்படியே எனது நூலின் தழுவலாக இருந்தது. கிறித்தவ பாதிரியாருடன் விவாதிப்பதற்காக நான் ஆறு மாதம் உழைத்து திரட்டிய தகவல்களைத் தான் அந்த நூலில் குறிப்பிட்டிருந்தேன்.

அவர் வெளியிட்ட ஆண்டு என்ன? நான் எத்தனை வருடங்களுக்கு முன் வெளியிட்டேன் என்பதை ஒப்பு நோக்கும் எவரும் இந்த உண்மையை உறுதி செய்து கொள்ளலாம் சென்னையில் ஒருவர் தவ்ஹீத் போர்வையில் நூல் வெளியிடும் ஒருவர் மற்றவர்களின் நூல்களைக் காப்பி அடித்து வெளியிட்டு வருவதை பலரும் அறிவார்கள். அவரைப் போன்று இழிந்தவராக இவரும் இருக்கிறர் என்று நான் பேசியதுண்டு. அவரை காஃபிர் என்று பேசியதில்லை. இது துவக்கமாக உங்களுக்குத் தரப்படும் தகவல். ஜாகிர் நாயக் அவர்களின் எழுத்திலும் பேச்சிலும் உள்ள மார்க்க முரணான கருத்துக்களையும் அதுபோல் மக்களால் அறியப்பட்ட மற்றவர்களின் தவறான கருத்துக்களையும் அம்பலப்படுத்தவே என் முழு கவனத்தையும் இணைய தளத்தின் பக்கம் திருப்பியுள்ளேன
மற்றொரு நேயரின் கருத்து
ASSALAMU ALLAIKUM ANNAN PJ AVARGALE, SRILANKAVIL IHWAN JAMATHAI SERNTHA PALAR KOORUKIRAARGAL,DR.ZAKIR NAIK UNGALAI(PJ) DEBATE KU ALLAITHA THAAGAVUM APPOYHU NEENGAL(PJ) SONEERGALAAM AYYO UNGALUDAN DEEBATA ? ENNAKU MUDIYATHU, UNGALOODU PANNINNAL NAAN MAATIKKOLVEN MELUM ENNAKU ENGLISH THERIYATHU ENDRU THAPITHU VITEERGALAAM APPOTHU AVAR (ZAKIR NAIK) SONNERAAM PARAVAIILAI INDIAVIL ULLA PALA PERUKKU URUDU HINDI THERIYUM THAANE ANTHA MOLIYIL DEBATE PANNUVOUM APPOTHU NEENGAL(PJ) SONEERGALAAM ILLAI MUDIYATHU MUDIYATHU AVARODU DEBATE? NAAN THOLVI ADAIVEN ENDRU PAYANTHU NEENGAL PALTI ADITHEERGAL ENDRU YOOSUF AL QARLAAWI, HASSANUL BANNA, SEYED QUTUB PONDRAVALIN PAKTHA KODIGAL ENGALAI PAARTHU KELI SEIKERAARGAL. ITHU UNMAIYAA ? ENGALUKKU ITHU SAMBANTHAMAAGE POORANA VILLAKAM THARVUM. WASSALAM KM

இது போன்று சிலர் உளறுவது பற்றி இப்போது தான் கேள்விப்படுகிறேன். அவர்கள் ஜாகிர் நாயக்கை விவாதத்துக்கு ஒப்புக் கொண்டு சம்மதம் வாங்கச் சொல்லுங்கள். மொழி பெயர்ப்பாளரை நடுவில் வைத்துக் கொண்டால் மொழி ஒரு பிரச்சனை இல்லை பில்லி சூனியம் இஜ்மா கியாஸ், சஹாபாக்களைப் பின்பற்றுதல், மறைமுக மத்ஹப் ஆதரவு, அவரது இரட்டை நிலை, ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீன்டும் மீன்டும் ஜகாத் கொடுத்தல், குர்ஆன் ஹதீஸ் பற்றி அவருக்கு உள்ள அறியாமை உள்ளிட்ட அனைத்தைப் பற்றியும் விவாதிக்க பகிரங்கமாகவே அவருக்கு அறைகூவல் விடுகிறேன். மற்றவர்கள் விவாதிப்பதற்கு தயங்கலாம். நேரடிக் கேள்விகளுக்கு பதில் சொல்லி பல மேடைகளைச் சந்தித்தவருக்கு தயக்கம் தேவை இல்லை. அவரோ அவர் சார்பில் யாருமோ என்னை விவாதத்துக்கு அழைக்கவில்லை. நான் தான் அழைத்துக் கொண்டிருக்கிறேன்.

இன்னொரு நேயரின் கருத்து

ஜாகிர் நாயிக் சம்பந்தமான பல விமர்சனங்களை தங்களது இணையத்தளத்தில் நான் பார்க்க நேர்ந்தது. முஸ்லிமல்லாத மாற்று மத சகோதரர்களுக்கு அவர் செய்யும் தஃவா நிகழ்ச்சிகளில் ஒருசிலதை நானும் பார்த்ததுண்டு. என் உள்ளம் கவர்ந்த அழைப்பார்களுள் அவரும் ஒருவராயிருந்தார் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் தங்கள் இணையத்தளத்தில் அவர் சம்பந்தமான விமர்சனங்களைப் பார்த்ததிலிருந்து அவரது கொள்கைகள் என்ன, இஸ்லாம், தவ்ஹீத் சம்பந்தமாக அவரது நிலைப்பாடு என்ன? ஹதீஸ் கலை சம்பந்தமாக அவருக்கிருக்கும் ஞானம் எவ்வளவு? தூய வஹியான அல்குர்ஆன், ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் ஆகிய இரண்டையும் மாத்திரம் பின்பற்றும் ஒருவரா இந்த ஜாகிர் நாயிக்? என்று கடந்த சில நாட்களாக நான் தேடிப் பார்த்தேன்.

உண்மையில் ஆன்லைன்பீஜே.காம் இணையத்தளம் ஜாகிர் நாயிக்கைப் பற்றிக் கூறியிருப்பது முற்றிலும் உண்மையென்றே இப்பொழுது தோன்றுகிறது. மன்ஹஜ் (Methadology) என்றும், ஸஹாபாக்களைப் பின்பற்றலாம் என்றும், மார்க்கத்தில் வளைந்து கொடுத்துக் கொண்டும் உள்ள ஸலபுகளின் கூட்டத்தினர் கூட தமது இணையத்தளங்களில் ஜாகிர் நாயிக்கைப் பற்றி 'இஸ்லாத்தின் அடிப்படை அறிவில் கூடத் தெளிவில்லாதவர்', 'இடத்துக்கிடம் மாற்றிப் பேசுபவர்', 'பகட்டையும், ஆடம்பரத்தையும் நாடக் கூடியவர்', 'குர்ஆன் வசனங்களுக்குத் தப்புத் தப்பாக விளக்கம் கொடுக்கக் கூடியவர்', எல்லாவற்றுக்கும் மேல் 'ஆபத்தானவர்' என்றெல்லாம் பகிரங்கமாக விமர்சித்திருப்பதைப் பார்க்க முடிந்தது.

(பார்க்க:
http://www.salafitalk.net/st/viewmessages.cfm?Forum=9Topic=2538,
http://www.salafitalk.net/st/viewmessages.cfm?Forum=19Topic=2478,
http://www.salafitalk.net/st/viewmessages.cfm?Forum=8Topic=4240
)

மேற்குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்கள் அனைத்தும் எனது நுனிப்புல் மேயும் தேடலின் போது சிக்கியவை. இது சம்பந்தமாக இன்னும் ஆழமாக ஆராய ஆரம்பித்திருக்கிறேன். இன்ஷா அல்லாஹ் அவற்றையும் முடித்த பின் இன்னும் வலுவான ஆதாரங்களோடு நான் மீண்டும் ஒருமுறை எனது கருத்தை அனுப்புகிறேன் பிரசுரிப்பீர்களா?

தூய இஸ்லாத்தை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், யாருக்கும் வளைந்து கொடுக்காமல், தனக்கென்று ஒரு கருத்தும், பிறருக்கென்று வேறொரு கருத்தும் என்ற இரட்டைப் போக்கில்லாமல், அல்லாஹ்வைத் தவிர எவனுக்கும் அஞ்சாமல், தன்னைத் தவறென்று கண்டுவிட்டால், சிறுவனிடமாயிருந்தாலும் தாழ்மையோடு ஒப்புக்கொள்ளத் தயங்காமல் நடந்து கொள்ளும் தங்களது எளிiமாயன, அப்பழுக்கற்ற போக்கு தான் உலகிலுள்ள ஒட்டுமொத்த உலமாக்களை விட உங்களையும், உங்கள் ஜமாஅத்தையும் என் உள்ளத்தில் ஒரு படி உயர்த்தி வைத்திருக்கிறது. அந்த உணர்வின் வெளிப்பாடு தான் எனது இந்தக் கருத்து.
வஸ்ஸலாம்.
Sadath
Chilaw - Sri Lanka

 ஜாகிர் நாயக்கின் அறியாமை

இஸ்லாத்தில் இல்லாததை இஸ்லாம் போல் சித்தரிக்கும் ஜாகிர் நாயக்கின் அரியாமையை அறிந்திட

ஏர்வாடிப் பெரியவர் யார்

   அன்புள்ள கொள்கைச் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். டாக்டர் ஜாகிர் நாயக் குறித்து நெல்லை மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்த ஒரு பெரியவர் என்னிடம் கேள்வி கேட்டது பற்றியும், அப்போது ஜாகிர் நாயக்கின் கருத்துக்கள் பல தவறாக உள்ளன என்பதை அப்பெரியவருக்கு எழுதியதையும் இது குறித்து ஜாகிர் நாயக்கிடம் விளக்கம் கேட்குமாறு நான் அந்தப் பெரியவருக்கு கடிதம் எழுதியதையும் குறிப்பிட்டிருந்தேன். அந்தப் பெரியவர் யார் என்பது மறந்து விட்டது என்று நான் குறிப்பிட்டிருந்தேன்.
ஆனால் இது குறித்து சில விமர்சகர்கள் கேள்விகளை எழுப்பினார்கள்.
நான் பொய்யான தகவலைக் கூறுகிறேன் என்று அவர்கள் கருதினார்கள். என்னைப் பொருத்தவரை நான் கூறியது உண்மை என்றாலும் அதற்கான ஆதாரத்தை என்னால் எடுத்து வைக்க முடியாத போது அவர்கள் அதை நம்ப வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர்களுக்கு என் கூற்றில் நம்பிக்கை இல்லாததால் நான் கூறுவது பொய் என்று அவர்கள் கருதினால் அது அவர்களைப் பொருத்த வரை சரியானது தான்.
அதன் பின் அந்தப் பெரியவர் யார் என்பதைக் கண்டு பிடிக்க நான் பல வகையிலும் முயற்சி செய்தேன். பலனில்லை. அல்லாஹ்வின் அருளால் அந்தப் பெரியவர் யார் என்பது இப்போது தெரிந்து விட்டது. அந்தப் பெரியவர் தாமே இது குறித்த விபரங்களை எனக்கு அனுப்பியுள்ளார். அந்தப் பெரியவர் டாக்டர் கே.எம். ஷம்ஸுத்தீன் ஷாஃபி ஆவார்.
அவர் எனக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்ட முக்கிய விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
அன்புச் சகோதரர் மதிப்பிற்குரிய பீ.ஜே.அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். (வரஹ்)
நான் தங்களுக்கு 2002 ஆம் ஆண்டு ஒரு தபால் எழுதி எனது ஐய்யங்களுக்கு விபரம் அளிக்குமாறு வேண்டினேன்.
தாங்களும் விபரமாக பதில் எழுதி எனக்கு அனுப்பி வைத்தீர்கள்.
தாங்கள் ஆன்லைன்.பீஜே.காம் அறிவிப்பு செய்திருப்பதை ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றும் எனது 2வது மருமகன் n.m. பீர் முஹம்மது M.Sc, MEd, M.phil அவர்கள் அதைப் பார்த்து விட்டு ஏர்வாடியைச் சேர்ந்த தவ்ஹீதுப் பெரியவர் என்பது நானாகத் தான் இருக்க முடியும் என்று எண்ணி எனக்குத் தெரியப்படுத்தினார்கள். அத்துடன் ஏர்வாடி டிஎண்டிஜே யைச் சேர்ந்த m.a.k.முகைதீன் அவர்களும் என்னைத் தொடர்பு கொண்டார்.
இதன் பின்னர் ஃபைல்களை நான் தேடிப் பார்த்ததில் தங்களுக்கு நான் எழுதிய தபாலின் நகல் கிடைத்து விட்டது. ஆனால் தாங்கள் எனக்கு அனுப்பிய விபரமான பதில் தபால் கிடைக்கவில்லை.
இத்துடன் அந்தத் தபாலை அனுப்பியுள்ளேன்.
500 கிராமுக்கு அதிகமான எடை உள்ள பொருளை தூக்கக் கூடாது என்று மருத்துவர்கள் கூறியுள்ளதால் உங்கள் தமிழாக்கத்தை படிக்க முடியவில்லை. அதைச் சிறிய பைண்டிங்குகளாக ஆக்கினால் நான் படிக்க முடியும்.
இப்படிக்கு
அன்புள்ள
k.m.s.shaafi
இவ்வாறு அந்தப் பெரியவர் எழுதி நான் அவருக்கு எழுதிய கடிதத்தின் நகலையும் அனுப்பியுள்ளார்.
இதற்கு நான் எழுதிய விரிவான பதிலில் தான் ஜாகிர் நாயக் கூறுவது குர் ஆன் ஹதீஸுக்கு முரணானது என்பதை விளக்கி அவரிடமே விளக்கம் கேட்குமாறு எழுதினேன்.


அந்தக் கடிதம் இது தான்.

இன்ஷா அல்லாஹ் ஜாகிர் நாயக்கின் தவறுகளைச் சுட்டிக் காட்டி அந்தப் பெரியவர் வழியாக நான் எழுதிய கடிதமும் கிடைக்க துஆ செய்கிறேன்.
பீ.ஜைனுல் ஆபிதீன்


மற்றொரு நேயரின் நேரடி ரிப்போர்ட்

அன்புள்ள சகோதர்களுக்கு! அஸ்ஸலாமு அலைக்கும்.ஜாகிர் நாயக்கையும் அவரது அமைப்பையும் தூக்கிப் பிடிக்கும் சகோதர்களுக்கு நான் அங்கே கண்ட நிலையைத் தெரிவிக்கின்றேன். இரண்டு வாரங்களுக்கு முன் நான் மும்பை சென்றிருந்த போது நானும் ,என் உறவினரும் ஜாகிர் நாயக்கின் அமைப்பான IRF க்கு சென்றிருந்தோம் .அன்று ஜாகிர் நாயக் இல்லாததால் அவருக்கு பதிலாக நிசார் நாதியாவாலா என்பவர் கேள்வி பதில் நிகழ்ச்சியினை நடத்தினார். அப்போது நாம் இணை கற்பிக்கும் இமாமை பின்பற்றலாமா என்ற கேள்வியை கேட்டோம் . அதற்கு அவர் பதிலளிக்கையில் ஜூம்மா தொழுகை தவறிவிடும் என்றிருந்தால் இணை கற்பிக்கும் இமாமை பின்பற்றலாம் என்ற தீர்ப்பைக் (?) கூறினார். இணை கற்பிப்பவரை எப்படி தொழுகையில் நம் தலைவராக ஏற்று கொள்வது என்று கேட்டதற்கு அவரை தலைவராக ஏற்று கொள்ளாதீர்கள்,ஆனால் அவருக்குப் பின்னால் தொழலாம் என்றார். அடுத்து திருமணத்தைப் பற்றிய அவர்களின் நிலைபாட்டினைக் கேட்க முயன்ற போது நேரம் முடிந்துவிட்டது என்றார்கள். எனவே அவரைத் தனியாகச் சந்தித்து ஆடம்பரமாக நடக்கும் திருமணத்திலே கலந்து கொள்ளலாமா என்று கேட்டோம்.அதற்கு அவர் தாராளமாக கலந்து கொள்ளலாம் என்றார்.அப்போது நாம் தீமையைக் கண்டால் மனதால் வெறுத்து ஒதுங்குவது தான் ஈமானின் குறைந்த நிலை என்ற ஹதீஸைக் கூறினோம்.அதற்கு அவர் மனதால் வெறுத்து ஒதுங்குவது என்பது புறக்கணிப்பது அல்ல,அங்கே இருந்து கொண்டே வெறுக்கலாம் என்று கூறினார். அன்று மதியம் அங்கே இருந்த லைப்ரரிக்குச் சென்றோம்.அப்போது அங்கே பணிபுரியும் மதனி ஒருவர் எங்கள் முன் அமர்ந்திருந்தார். அவரிடம் காலையில் நாம் கேட்ட இரண்டு கேள்விகளையும் கேட்டோம்.அதற்கு அவர் நிச்சயமாக இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றி தொழக் கூடாது.ஆடம்பரமாக நடக்கும் திருமணத்திலும் கலந்து கொள்ளக் கூடாது என்றார்.அப்போது நாம் அவரிடம் காலையில் நாம் இந்த கேள்விகளைக் கேட்ட போது பதிலளித்தவர் அளித்த பதிலையும் கூறினோம். அதற்கு அந்த மதனி கூறினார் நீங்கள் கேட்ட கேள்வி ஒரு வேளை அவருக்குச் சரியாக விளங்கியிருக்காது,அது மட்டுமல்லாது அந்தச் சபையில் பலதரப்பட்ட மக்களும் இருப்பார்கள்.ஆகவே நாம் இப்போது நமக்கிடையே கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதைப் போல் மக்களிடையே சொல்ல முடியாது என்றார். இத்தனைக்கும் அந்த சபையில் முப்பது பேர்களுக்கு உள்ளாகத் தான் இருந்தார்கள்.அவர்களில் இருபத்தைந்து பேர்களுக்கு மேற்பட்டவர்கள் தர்கா வழிபாடு தவறு என்ற கருத்து உடையவர்களாகத் தான் இருந்தார்கள். அவர்களின் லைப்ரரியில் உள்ள தமிழ்ப் பகுதிக்கு பீஜே அவர்களின் திருக்குர்ஆன் மொழிப்பெயர்ப்பை அன்பளிப்பாக அளித்து விட்டு தமிழகத்திலே மக்களுக்கு அஞ்சாமல் சத்தியத்தை எடுத்து கூறும் மார்க்க அறினர்களை தந்த அல்லாஹு ரப்புல் ஆலமீனுக்கு நன்றி செலுத்தியவர்களாக வீடு திரும்பினோம்.

Admin Rpl ? va alaikumus salam ஆடம்பரத் திருமணத்தில் கலந்து கொள்வது குறித்தும் இணை கற்பிப்பவரின் பின்னால் தொழலாமா என்பது குறித்தும் ஜாகிர் நாயக்கின் கருத்தை அவரது எழுத்து, மற்றும் பேச்சு ஆதாரம் வைத்திருப்பவர்கள் அனுப்பி வைத்தால் அது குறித்து நம் கருத்தைக் கூற முடியும்.


Powered by Blogger.