Jun 10, 2012

நாங்கள் தனித்து செயற்படுவது ஏன்?

Posted on 6:39 AM by ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் மருதமுனை

  


திருக்குர்ஆனும், நபி (ஸல்) அவர்களின் வழி காட்டுதலும் தவிர வேறு எதுவும் இஸ்லாத்தின் மூல ஆதாரங்களில்லை என்பதை நாம் வலியுறுத்தி பிரச்சாரம் செய்து வருகிறோம். அல்லாஹ்வின் வேதத்தையும், நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலையும் தவிர எவரது நடவடிக்கைகளையும் மார்க்க ஆதாரமாக ஏற்றுக் கொள்ளக் கூடாது எனவும், எவ்வளவு பெரிய மேதையானாலும் நபித் தோழர்களேயானாலும் அவர்களின் கூற்றுகளும், செயல்களும் கூட மார்க்க ஆதாரமாக முடியாது எனவும் தெளிவுபடக் கூறி வருகிறோம். அல்லாஹ்வையும் அவனது தூதரையும் புறக்கணிப்பவர்களுடன் இணைந்து வணக்கங்கள் செய்ய முடியாது என்ற காரணத்தால் நாம் தனித்து செயற்படுகின்றோம். ஆதாரங்களையும், காரணங்களையும் எடுத்துக் காட்டியே நாம் இவ்வாறு கூறியும் செய்தும் வருகின்றோம். ஆயினும் சிலர் நாம் எடுத்துக் காட்டும் ஆதாரங்களைச் சிந்திக்காமல், ஊர் ஒற்றுமையை நாம் குலைப்பதாகத் தவறான பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
‘திருக்குர்ஆனிலோ, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலிலோ இல்லாத ஒன்றை அல்லது இவ்விரண்டுக்கும் முரண்பட்ட ஒன்றைச் செய்யலாகாது. அதை எவ்வளவு பெரிய அறிஞர் கூறினாலும், நபித் தோழர்களே கூறினாலும் அவற்றை ஏற்க வேண்டிய அவசியம் இல்லை” என்று நாம் கூறி வருகிறோம். இது தான் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை என்றும் கூறுகிறோம். இவ்வாறு கூறுவதைப் புரிந்து கொள்ளாதவர்களும், புரிந்து கொண்டு புரியாதது போல் நடிப்பவர்களும் நாம் ஊரில் பிரிவினை ஏற்படுத்திவிட்டதாகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
தவ்ஹீத் போர்வையைப் போர்த்திக் கொண்டு தவறான மார்க்கம் போதிப்பவர்கள் இதில் முன்னணியில் உள்ளனர். மத்ஹபுகளைப் பின்பற்றக் கூடாது என்று நாம் கூறிய போது, இமாம்களை நாம் இழிவுபடுத்துவதாக மத்ஹபு வாதிகள் பழி சுமத்தினார்கள். தர்கா வழிபாடு கூடாது என்று நாம் கூறிய போது அவ்லியாக்களை நாம் கேவலப்படுத்துவதாக சமாதி வழிபாடு நடத்துவோர் திசை திருப்பினார்கள். இவர்களின் இந்த வழிமுறையைத் தான் தவ்ஹீத் போர்வையில் தவ்ஹீதைக் கெடுக்க நினைப்பவர்களும் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளனர்.
சத்தியக் கொள்கையும் ஊர் ஒற்றுமையும்
இன்று பறகஹதெனியவில் தூய்மையான முறையில் சத்திய இஸ்லாத்தை பின்றபற்றும் நாங்கள்ää இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்து இஸ்லாத்தின் கொள்கையை விளங்காதவர்களுக்கும், அந்நியர்களுக்கும் தெளிவுபடுத்தி வருகின்றோம். நாம் உண்மையான கொள்கையை மக்கள் மத்தியில் சொல்ல ஆரம்பித்த போதுää பல்வேறு தொல்லைகளை சிலர் தந்தார்கள். அதனால் நாங்கள் நபிவழிப் பிரகாரம் ஒரு வீட்டில் ஜும்ஆத் தொழுகையை நிறைவேற்றி வருகின்றோம். இவ்வாறு ஜும்ஆ நடத்துவது ஊரில் பிரிவினை ஏற்படுத்துவதற்கு இல்லை. உண்மையான சத்தியத்தை நிலை நாட்டுவதற்குத் தான். இதனால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை.
ஊரில் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் பல விடயங்கள் தினந்தோறும் நடக்கிறது. நமது ஊரில் வட்டி எடுப்பவர்கள், கொடுப்பவர்கள் இருக்கின்றார்கள். வட்டிக்கு விளம்பரம் செய்தவர்களும் இருக்கிறார்கள். வரதடசணை வாங்குபவர்கள் கொடுப்பவர்கள் இருக்கின்றார்கள். திருடுபவர்கள் இருக்கிறார்கள். ஆபாயா போட்டுக் கொண்டு கோயிலுக்குப் போகிறவர்கள், அந்நிய ஜாதியோடு ஓடிப்போபவர்கள் இருக்கிறார்கள். இவர்களால் ஊரின் மானம் கப்பலேற்றப்படுகிறது. உண்மையான ஊர்ப்பற்று உள்ளவர்கள் இந்த கொடூரமான சமூகத் தீமைகளைத் தடுக்க முதலில் களம் இறங்க வேண்டும்.
இன்னும் எமது ஊர் அரசியல் ரீதியாக பல கூhறாகப் பிரிந்துள்ளது. மார்க்க ரீதியாக 60 வருடத்திற்கும் மேலாக ஒரே வேலியில் இரண்டு பள்ளியில் இரண்டு ஜமாஅத்துகள் உள்ளன. மிகக் கிட்டிய தூரத்தில் இரண்டு ஜூம்ஆக்கள் நடக்கிறது. ஊரை இரண்டாகப் பிரித்துள்ள பெரிய இப்பிழவை, ஒற்றுமையை விரும்புபவர்கள் முதலில் இல்லாமலாக்க வேண்டும். பெரிய ஓட்டை உள்ளது. வெள்ளம் வந்தால் அதனால்தான் பாதிப்பு வரும். அதைத்தான் முதலில் அடைக்க வேண்டும்.இதைச் செய்துவிட்டு ஒற்றுமை முயற்சி எடுத்தால் அதுதான் உண்மையான ஒற்றுமை முயற்சியாக அமையும்.
இணைவைப்பு என்பது சிலை, கப்ர் வணக்கம் மட்டுமல்ல. அல்லாஹ்வின் அதிகாரத்தை, அவனது சக்தியை, சூனியக்காரனுக்கோ, தலைவனுக்கோ, அரசியல் வாதிக்கோ கொடுப்பதும், இருப்பதாக நம்புவதும் ஷிர்க்தான்.
(முஹம்மதே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதை நீர் பின்பற்றுவீராக! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக! திருக்குர்ஆன் : 6:106
உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்! திருக்குர்ஆன் : 7:3
ஊரிலுள்ள போலி ஒற்றுமையைவிட கொள்கை ரீதியான உண்மையான ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்றுதான் நாம் விரும்புகின்றோம். அந்த ஒற்றுமை அல்குர்ஆனையும் ஹதீஸ்களையும் அனைவரும் பின்பற்றுவதனால் மட்டுமே ஏற்படும்.
அல்லாஹ்வின் மார்க்கத்தை அடகு வைத்துவிட்டு ஏற்படுத்தும் போலி ஒற்றுமை நிலைத்து நிற்காது. அதனால் தான் தேர்தல் வரும்போது அடித்துச் சண்டை போடுகிறார்கள். 60 வருடமாக ஊர் கொள்கை ரீதியாக இரண்டாகவே உள்ளது.
நாம் அவ்வாறில்லை. எங்கள் கொள்கை சாராத மற்றவர்களின் உலக உரிமைக்காக, அவர்கள் எங்களை எதிர்ப்பவர்களாக இருந்தாலும் கூட குரல் கொடுப்போம். அதனால்தான் தம்புள்ள பள்ளிக்காக எங்கள் தலைமையகம் கொழும்பில் ஆர்ப்பாட்டம் செய்தது. சமூக ஒற்றுமை பேசுபவர்கள், தங்கள் கட்சியை நேசிப்பவர்கள் இந்தப் பிரச்சினையில் மவுனம் காத்தார்கள். சிலர் உரிமையைத் தட்டிக் கேட்பது கூடாது என்றனர். எங்கே இவர்களின் ஒற்றுமை!? 
வஹியின்றி நேர்வழி இல்லை
நேர்வழி காட்டும் அதிகாரம் எவருக்கும் மனிதர்கள் யாருக்கும் இல்லை. அது எனக்கு மட்டுமே உரியது என்பது தான் இறைவனிடமிருந்து மனிதனு(மண்ணுலகு)க்கு வந்த முதல் கட்டளை. அல்லாஹ்வின் கட்டளை தவிர வேறு எவருடைய கூற்றையும் நடவடிக்கைகளையும் நாம் மார்க்கமாக ஆக்கக் கூடாது. இது குறித்து இறைவன் மிகத் தெளிவான வார்த்தைகளால் பல்வேறு வசனங்களில் தெளிவுபடுத்தியுள்ளான்.
எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம். திருக்குர்ஆன் : 20:122, 123, 124
“அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்!” என்று அவர்களிடம் கூறப்பட்டால் “எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே பின்பற்றுவோம்” என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும், நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா? திருக்குர்ஆன் : 2:170
“…எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றுவதில்லை. என் இறைவனுக்கு நான் மாறு செய்து விட்டால் மகத்தான நாளின் வேதனையை அஞ்சுகின்றேன்” என (முஹம்மதே!) கூறுவீராக! திருக்குர்ஆன் : 10:15
(முஹம்மதே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைப் பின்பற்றுவீராக! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான். திருக்குர்ஆன் : 33:2
கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் ‘அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை” (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்டமாட்டான். திருக்குர்ஆன் : 39:3
உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா? வானங்களிலும், ப10மியிலும் உள்ளதை அல்லாஹ் அறிவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன் என்று கூறுவீராக! திருக்குர்ஆன் : 49:16
அவர்களிடையே தீர்ப்பு வழங்கு வதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது ‘செவியுற்றோம், கட்டுப்பட்டோம்” என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு, அல்லாஹ்வை அஞ்சி பயப்படுவோரே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் : 24:51,52
இது அனுமதிக்கப்பட்டது, இது தடுக்கப்பட்டது என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டியோர் வெற்றி பெற மாட்டார்கள். திருக்குர்ஆன் : 16:116
அல்லாஹ் அனுமதியளிக்காததை மார்க்கமாக ஆக்கும் தெய்வங்கள் அவர்களுக்கு உள்ளனரா? தீர்ப்பு பற்றிய கட்டளை இல்லாதிருந்தால் அவர்களுக்கிடையே முடிவு செய்யப்பட்டிருக்கும். அநீதி இழைத்தோருக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது. திருக்குர்ஆன் : 42:21
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த தூயவற்றை தடுக்கப்பட்டவையாக ஆக்காதீர்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறுவோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான். திருக்குர்ஆன் : 5:87
“…அவர்களின் தீய செயல்கள் அவர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளன. (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் வழி காட்டமாட்டான். திருக்குர்ஆன் : 9:37
அவர்களுக்கு முழுமையான அறிவு இல்லாததாலும், விளக்கம் கிடைக்காததாலும் பொய்யெனக் கருதுகின்றனர். இவ்வாறே அவர்களுக்கு முன் சென்றோரும் பொய்யெனக் கருதினர். அநீதி இழைத்தோரின் முடிவு என்ன ஆனது என்பதைக் கவனிப்பீராக!. திருக்குர்ஆன் : 10:59
மேற்கண்ட வசனங்கள் பல்வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தி எந்த மனிதரின் கூற்றையும் பின்பற்றலாகாது என்பதை மிகத் தெளிவாக அறிவிக்கின்றன. அந்தவகையில், முன்னோரைப் பின்பற்றலாகாது! இறைவனிடமிருந்து அறிவிக்கப்பட்டதை மட்டும் பின்பற்ற வேண்டும்! வஹீயாக அறிவிக்கப்படுவதைத்தான் நபியே பின்பற்ற வேண்டும். வஹீயை மாற்றி அமைக்க நபிக்கும் அதிகாரம் இல்லை. மார்க்கத்தின் உரிமையாளன் அல்லாஹ் மட்டுமே. அல்லாஹ்வுக்கு மனிதன் மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்கக் கூடாது. அவன் அருளியதை மட்டுமே பின்பற்றி மற்ற வழிகேடுகளைப் புறக்கணிக்க வேண்டும்.
இவை அனைத்தும் கூறுவது என்ன? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூட சுயமாக ஒன்றை உருவாக்க அதிகாரம் படைத்தவரில்லை என்பதைத் தௌ;ளத் தெளிவாக அறிவிக்கின்றன. இவ்வளவு தெளிவாக அல்லாஹ் விளக்கிய பிறகும் இறைவனின் வழிகாட்டுதல் போதாது என்று எண்ணுவோர்தான், தவறான கொள்கை உடையோரைப் பின்பற்ற வேண்டும் என்று கூறி போலி ஒற்றுமை பேசமுடியும்.
நேர் வழி தனக்குத் தெளிவான பின் இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) மாறு செய்து நம்பிக்கை கொண்டோரின் வழியல்லாத (வேறு) வழியைப் பின்பற்றுபவரை, அவர் செல்லும் வழியில் விட்டு விடுவோம். நரகத்திலும் அவரை கருகச் செய்வோம். தங்குமிடங்களில் அது மிகவும் கெட்டது. திருக்குர்ஆன் : 4:115
‘அல்லாஹ்வையும்ää இத்தூதரையும் நம்பினோம்ää கட்டுப்பட்டோம்” என்று அவர்கள் கூறுகின்றனர். பின்னர் அவர்களில் ஒரு பிரிவினர் இதன் பிறகு புறக்கணிக்கின்றனர். அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர்.. திருக்குர்ஆன் : 24:47
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் செவிமடுத்துக் கொண்டே அவரைப் புறக்கணிக்காதீர்கள்! திருக்குர்ஆன் : 8:20
அவன் உங்களுக்காக உங்கள் செயல்களைச் சீராக்குவான். உங்களுக்காக உங்களின் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுபவர் மகத்தான வெற்றி பெற்று விட்டார்.. திருக்குர்ஆன் : 33:71
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! உங்கள் செயல்களைப் பாழாக்கி விடாதீர்கள்! திருக்குர்ஆன் : 47:33
அல்லாஹ்வின் தீனை நிலைநாட்ட முயற்சிப்பபோருடன் கோபம் வருவதைவிட, மார்க்கத்தை சிதைத்து, அதை வைத்து வயிறு வளர்ப்போர் மீது கவனத்தைத் திருப்பி, சமூகத் தீமைகளை ஒழிக்கப் பாடுவதோடு, சத்தியத்தின் பக்கம் மீண்டு, அதை நிலை நாட்ட உதவினால் நிச்சியம் அல்லாஹ் அவர்களுக்கு உதவுவான்.
அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர், அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்களுடன், உண்மையாளர்களுடன், உயிர்த் தியாகிகளுடன் மற்றும் நல்லோருடன் இருப்பார்கள். அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள்.” திருக்குர்ஆன் : 4:69

No Response to "நாங்கள் தனித்து செயற்படுவது ஏன்?"

Leave A Reply

Powered by Blogger.